1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

தமிழகத்தில் தளர்வுகள் அற்ற ஊரடங்கா..? தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கா..? விரைவில் அறிவிப்பு

தமிழகத்தில் தளர்வுகள் அற்ற ஊரடங்கா..? தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கா..? விரைவில் அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக அதிகரித்த தொற்று பரவலால், கடந்த 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் ஊரடங்கை மக்கள் சரியாக பின்பற்றாத காரணத்தால் கொரோனா பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து, ஊரடங்கை 31ம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்காக முதல்-அமைச்சர் அறிவித்தார்



இந்த சூழலில் தமிழகத்துக்கு தேவைப்பட்டால் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் முழு ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா என்பது குறித்தும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடதினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மருத்துவம், வருவாய்துறை, பொதுத்துறை மற்றும் காவல் துறை உயரதிகாரிகள்கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிம முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின்  கோவை, திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கொரோனா தாக்கம் குறையவில்லை.தொற்று அதிகமுள்ள 6 மாவட்டங்களிலும் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். அடுத்த ஒரிரு வாரங்கள் மாவட்ட கலெக்டர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என கூறினார். 

 மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கை நீட்டிக்கலாமா? தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தலாமா? என அதிகாரிகளிடம் கருத்துக்கேட்கபட்டது.

மேலும் மளிகை மற்றும் காய்கறி கடைக்கு மட்டும் அனுமதி தரலாமா? எனவும் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனால் முடிவில் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அது தளர்வுகள் அற்ற ஊரடங்கா? தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கா என்பது பற்றி விரைவில்  அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags