1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்வு ஆணை ரத்து? நீதிமன்றம் உத்தரவு!

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்வு ஆணை ரத்து? நீதிமன்றம் உத்தரவு!


தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய கோரி வழக்கு தொடரப்பட்டது. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக்கூறி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

ஓய்வு பெறும் வயது:



தமிழகத்தில் அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதை 58-லிருந்து 59 ஆக உயர்த்தி கடந்த ஆண்டு மே மாதம் அரசு அறிவித்தது. இது அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் அரசியலமைப்புகள், உள்ளாட்சி அமைப்புகள், அனைத்து பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் ஆகியோர்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் தனது எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் அரசு நடப்பாண்டு பிப்ரவரி மாதம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59-லிருந்து 60 ஆக உயர்த்தி அரசாணை பிறப்பித்தது


அரசின் இந்த அறிவிப்பால் இளைஞர்களுக்கு அரசு பணி கிடைக்க கால தாமதம் ஆகும். ஏற்கனவே தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது. மேலும் அரசு பணியாளர்கள் வயது உயர்வால் உடல் நலக்குறைபாடு ஏற்பட கூடும். இந்த நிலையில் தொடர்ந்து பணிபுரிவது ஏற்றதல்ல. இத்தகைய சூழலில் அரசின் முடிவு அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி மதுரை திருமங்கலத்தை சேர்ந்தவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார்

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சிவஞானம், அனந்தி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தியது அரசின் கொள்கை முடிவு. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி கோபிநாத்தின் பொதுநல வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. தற்போது வரை தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உள்ளது

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags