1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

ஆன்லைன் வகுப்புகளால் குழந்தைகளுக்கு இப்படி ஒரு ஆபத்தா? நிபுணர்கள் எச்சரிக்கை

ஆன்லைன் வகுப்புகளால் குழந்தைகளுக்கு இப்படி ஒரு ஆபத்தா?


கரோனா பேரிடர் காரணமாக, பள்ளிச் செல்லும் குழந்தைகளின் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் முறைக்கு மாறிவிட்டது. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இதே நிலைதான் நீடிக்கிறது.

 

இப்படி நீண்ட நாள்களுக்கு குழந்தைகள் ஆன்லைன் மூலம் கல்வி கற்பது, எதிர்காலத்தில் குழந்தைகளுக்குக் கிட்டப்பார்வை பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் உதவிப் பேராசிரியர் டாக்டர் சிகா குப்தா கூறுகையில், மற்ற தொழில்நுட்ப சாதனங்களை விடவும், செல்லிடப்பேசிகள் விலைக் குறைவாக இருப்பதால், பெரும்பாலான குழந்தைகள் செல்லிடப்பேசி வாயிலாகவே ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கின்றன. ஆனால், செல்லிடப்பேசிகளை பல மணி நேரமாக பார்த்துக் கொண்டிருக்கும் போது குழந்தைகளுக்கு கிட்டப்பார்வை பிரச்னை அல்லது பொதுவான கண்பார்வை குறைபாடு ஏற்படும்.

செல்லிடப்பேசி வாயிலாக படிப்பதும், ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பதும், கண்களுக்கு மிகவும் தீங்கானது. அதற்கு பதிலாக கணினி அல்லது தொலைக்காட்சி போன்ற பெரிய திரைகளைப் பயன்படுத்தலாம். கூடுமானவரை, குழந்தைகளின் செல்லிடப்பேசிகளை தொலைக்காட்சியுடன் இணைத்து விடலாம். செல்லிடப்பேசிகளை ஆன்லைன் வகுப்புகளுக்குப் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்த்துவிடுங்கள். ஆனால், செல்லிடப்பேசியே வாங்க வழியில்லா பல மாணவ, மாணவிகள் இருக்கும் போது, அதனை விட விலை கூடுதலாக தகவல் தொழில்நுட்ப சாதனங்களை வாங்குவது என்பது இயலாத காரியம் என்கிறார். குழந்தைகளுக்கு கிட்டப்பார்வை பிரச்னைகளோடு தற்போதுவரை பெரிய அளவில் யாரும் மருத்துவமனைக்கு வரவில்லை. கரோனா போன்ற பேரிடர் காலத்தில் குழந்தைகளை மருத்துவமனைகளுக்குக் கூட்டி வர பெற்றோர் பயப்படுவது வழக்கம். இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்தால், அடுத்த சில ஆண்டுகளில், இந்த பிரச்னை அதிகரிக்கும். நிச்சயம் இந்த ஆன்லைன் வகுப்புகள் குழந்தைகளை பெரிய அளவில் பாதிக்கும். ஏராளமான குழந்தைகளுக்கு கிட்டப்பார்வை குறைபாடு ஏற்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பல குழந்தைகள் 4 மணி நேரத்துக்கும் மேலாக செல்லிடப்பேசியை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது மிகவும் அபாயமானது என்கிறார் மருத்துவர்.

மற்றொரு மருத்துவமனையில், குழந்தைகளுக்கான கண் மருத்துவராக பணியாற்றி வரும் டாக்டர் ஷாலினி கார்க் கூறுகையில், சுமார் இரண்டு ஆண்டுகளாக குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று வருகிறார்கள். இதனால், கிட்டப்பார்வை குறைபாடு கொண்ட குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 1.5 முதல் 3 மடங்கு அதிகரித்திருக்கிறது. மருத்துவமனைக்கு வரும் குழந்தைகளில் 90% பேருக்கு கிட்டப்பார்வை குறைபாடு அல்லது அவர்கள் ஏற்கனவே அணிந்திருக்கும் கண்ணாடியின் திறனை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags