1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

புதிய கொள்கையை கட்டாயப்படுத்த மாட்டோம்: வாட்ஸ்ஆப் உறுதி

புதிய கொள்கையை கட்டாயப்படுத்த மாட்டோம்: வாட்ஸ்ஆப் உறுதி




தங்களது புதிய 'பிரைவசி' கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என பயனாளர்களை கட்டாயப்படுத்த மாட்டோம் என வாட்ஸ்ஆப் நிறுவனம் டில்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும், வாட்ஸ்ஆப் சமூக வலைதளம், சமீபத்தில் தன் தனிநபர் தகவல் பாதுகாப்பு தொடர்பான, 'பிரைவசி' கொள்கையில் மாற்றம் செய்வதாக அறிவித்தது. அதன்படி, 'பயனாளர்களின் தகவல்கள், தாய் நிறுவனமான, 'பேஸ்புக்' உடன் பகிர்ந்து கொள்ளப்படும்' என, அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.




வாட்ஸ் ஆப் நிறுவனம், சமீபத்தில் தனிநபர் தகவல் பாதுகாப்பு தொடர்பான பிரைவசி கொள்கையில் மாற்றம் செய்வதாக அறிவித்தது. பயனாளர்களின் தகவல்கள் தாய் நிறுவனமான பேஸ்புக் உடன் பகிர்ந்து கொள்ளப்படும் என்றது. இதை எதிர்த்து, டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின்போது, புதிய பிரைவசி கொள்கையை நிறுத்தி வைப்பதாக வாட்ஸ் ஆப் தெரிவித்தது. தகவல் பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வரும் வரை, புதிய கொள்கையை ஏற்குமாறு பயனாளர்களை கட்டாயப்படுத்த மாட்டோம். ஏற்காதவர்களுக்கு சேவையை குறைக்க மாட்டோம் என்று வாட்ஸ் ஆப் தெரிவித்துள்ளது.

latest tamil news



இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, வாட்ஸ் ஆப் நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹாரிஸ் சால்வே கூறியதாவது: புதிய 'பிரைவசி' கொள்கையை, நாங்களாகவே நிறுத்தி வைக்கிறோம். இந்த கொள்கையை ஏற்க வேண்டும் என பயனாளர்களை கட்டாயப்படுத்த மாட்டோம். இதனை ஏற்காதவர்களுக்கு ,வழங்கப்படும் சேவையை குறைக்க மாட்டோம். தகவல் பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வரும் வரை, புதிய கொள்கை குறித்த செய்தியை பயனாளர்களுக்கு காட்டுவோம். இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags