நீட் தேர்வு ஒத்திவைப்பு:
தேசிய தேர்வு முகமை சார்பில் ஆண்டுதோறும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை வழங்கப்படும்.
இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவடைந்தவுடன் மே மாத இறுதியில் இந்த தேர்வு நடத்தப்படும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இந்த தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு 60 நாட்களுக்கு முன்னதாக விண்ணப்ப பதிவு தொடங்கப்படும்.
ஆனால் இந்த ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெற உள்ள தேர்விற்கு இன்னும் விண்ணப்ப பதிவு தொடங்கப்படவில்லை. இதனால் நீட் தேர்வு தொடர்பாக நாடு முழுவதும் மாணவர்களிடம் மாறுபட்ட கருத்துகளும், எதிர்பார்ப்புகளும் நிலவுகிறது. மேலும் கொரோனா பரவல் தற்போது குறைந்து வந்தாலும் இன்னும் அச்சம் நீங்கவில்லை. எனவே இந்த தேர்வை செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.







No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.