1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

பிளஸ் 2க்கு பிறகு என்ன படிக்கலாம்: உயர் கல்வி ஆலோசனை!


https://i1.wp.com/www.blog.epravesh.com/wp-content/uploads/2010/05/Edu-Option-Graph.gif



பிளஸ்2 தேர்வு முடிந்து ரிசல்ட் வந்து விட்டது. பல்வேறு உயர் கல்வி படிப்புகள் குவிந்து கிடப்பதால் எந்த படிப்பில் சேரலாம் என்று முடிவெடுப்பதில் மாணவர்களும், பெற்றோர்களும் தவித்தாலும் உடனடியாக முடிவு எடுக்க வேண்டிய காலத்தில் இருக்கிறீர்கள்.
பிளஸ் 2க்கு பிறகு என்ன படிக்கலாம்: உயர் கல்வி ஆலோசனை!

அதாவது, இப்போது உங்கள் முன்னால் ஒரு பிரமாதமான விருந்துச் சாப்பாடு வைக்கப்பட்டுவிட்டது. அதில் நீங்கள் விரும்பும் உணவு வகை எது என்று தேர்ந்தெடுத்து முடிவுசெய்ய வேண்டியது உங்களுடைய பொறுப்புதான். நீங்கள் உணவைத் தேர்ந்தெடுக்கும்போது, சுவையை அடிப்படையாக வைத்து முடிவெடுக்கலாம். அதேசமயம் அந்த உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும், சரியாக ஜீரணமாக வேண்டும், ருசியாகவும் இருக்க வேண்டும். அதேபோல் இங்கே பலவிதமான படிப்புகள் உள்ளன. மாணவர்களும் பெற்றோரும் இதிலிருந்து தங்களுக்குப் பொருத்தமான ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அது அவர்களுடைய விருப்பத்துக்கு, திறமைக்கு, பொருளாதார வசதிக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். எதிர்காலத்தை மனத்தில் வைத்து வேலைவாய்ப்பிற்கு உகந்ததாகவும் இருக்க வேண்டும். நீங்கள் இதுபற்றி ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னால் நம்மை நாமே சில கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்.

நீங்கள் படிக்க வேண்டிய படிப்பு முடிவாகிவிட்டதா? ஆம் என்றால் அதை எந்த அடிப்படையில் முடிவு செய்தீர்கள் என்பதையும் அதை முழுமையாக ஆராய்ந்தீர்களா? என்பதையும் பற்றி அறிவது மிகவும் அவசியம்.

பிளஸ் 2க்கு பிறகு என்ன படிக்கலாம்: உயர் கல்வி ஆலோசனை!

இது தொடர்பாக, "ஸ்டடிகைடு இந்தியா" நிறுவனத்தின் தலைவரும், கல்வியாளருமான ச.பார்த்தசாரதி நம்மிடம் விளக்குகிறார்.

நீங்கள் உங்கள் பெற்றோரின் அறிவுரை மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் ஒரு படிப்பை படிக்க முடிவுசெய்து முடிவெடுத்தீர்களா? ஆனால் உங்களுக்கு வேறு படிப்பில் ஆர்வம் இருக்கிறதா?

உங்கள் பெற்றோர் என்ன காரணங்களுக்காக ஒரு படிப்பை உங்களுக்கு பரிந்துரைக்கிறார்கள் என்பதை அறியவும். அவர்கள் சொல்லும் காரணங்கள் உங்களுக்கு உகந்ததாக இல்லாது போனாலோ அல்லது அந்த படிப்பு உங்களுக்கு ஏற்றதல்ல என்று நினைத்தாலோ அதற்குரிய காரணங்களை உங்கள் பெற்றோருக்கு பொறுமையாக விளக்குங்கள். இன்று நீங்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பு, உங்கள் வேலைவாய்ப்பின் திசையை தீர்மானிக்கும் ஒன்றாக இருக்கிறது. வாழ்நாள் முழுதும் நீங்கள் அதனுடன் பயணிக்க வேண்டும். எனவே பெற்றோர் சொன்னார்கள் என்பதற்காக விருப்பம் இல்லாமல் ஏற்றுக்கொள்ளாமல், அவர்கள் தேர்ந்தெடுத்ததில் உள்ள பின்புலங்களை கேட்டு அறியுங்கள். மேலும் ஏன் அது உங்களுக்கு சரியான படிப்பு இல்லை என்று கருதுகிறீர்கள் என்று மனம் விட்டு பேசுங்கள், கலந்துரையாடுங்கள். உங்களுக்குள் ஒரு முழுமையான மற்றும் வெளிப்படையான கலந்தாய்வு நடந்தால் நீங்களும் உங்கள் பெற்றோரும் சேர்ந்து ஒரு படிப்பை தேர்ந்தெடுக்கலாம். உங்கள் பெற்றோர் உங்கள் எதிர்காலத்தை பற்றி உங்களைவிட அதிகம் அக்கறை உள்ளவர்கள் என்பதையும், உங்களுக்கு தேவையான பக்குவம் வரும் வரை உங்களை வழிநடத்த வேண்டிய பொறுப்பு உடையவர்கள் என்பதையும் உணரவும். உங்கள் குடும்பத்தில் இம்மாதிரி அமர்ந்து பேசும் சூழ்நிலை இல்லையாயின் ஒரு நல்ல கல்வி வழிகாட்டி அணுகினால் அவர்கள் உங்கள் இருவரையும் பேசச் சொல்லி உண்மையை விளக்குவார்கள்.

பெற்றோர்கள் கவனத்திற்கு: உங்கள் பிள்ளைகள் உங்களுடைய குடும்பத்துக்கு மட்டுமல்ல, இந்த உலகத்துக்கும் ஒரு சிறப்புப் பரிசாகத் திகழ்கிறவர்கள். அவர்கள் என்னவாகப் போகிறார்கள் என்று அறிந்து வழிகாட்டுங்கள். அவர்கள் எதில் ஆர்வம் செலுத்துகிறார்களோ, எதைச் சிறப்புத் தகுதியாக வளர்த்துக் கொள்கிறார்களோ அதை மட்டுமே அவர்களால் சாதிக்க முடியும். ஒருவருக்கு கணிதத்தில் ஆர்வம் இல்லாமல் அக்கவுண்டன்சி படிக்க விரும்பினால் அவரை அதில் என்ன வாய்ப்புகள் உள்ளது என்பதை அறிந்து அதில் சேர்க்க வேண்டும். நீ என்ஜினீயர் ஆகவேண்டும் என வற்புறுத்தக் கூடாது. அப்படிச் செய்தால், அவர் உங்களுடைய லட்சியத்தை நிறைவேற்றுவதற்காக படிப்பார், தன்னுடைய லட்சியத்தை எண்ணி அல்ல!

உங்கள் பிள்ளைகளுடன் இதுபற்றிப் பேசுங்கள். அவர்களுடைய எண்ணத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். அதன் பிறகே நீங்கள் அவர்களுக்கான படிப்பை முடிவு செய்ய வேண்டும். நீங்கள் முடிவேடுப்பவராக இல்லாமல், உங்கள் பிள்ளைகளை முடிவெடுக்க வைத்து வழிகாட்டுபவராக நீங்கள் இருங்கள்.

சில பெற்றோர், அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் தவறவிட்ட படிப்புகளைத் தங்கள் பிள்ளைகள் மீது திணிக்கிறார்கள். அவர்கள் மூலம் அதைச் சாதித்துவிடலாம் என்று எண்ணுகிறார்கள். உங்கள் பிள்ளைகள் நீங்கள் நினைப்பதைவிடச் சிறந்த திறமைசாலிகளாக இருக்கலாம். அவர்கள் உங்கள் மூலம் இந்த உலகத்திற்கு வந்துள்ளார்கள். உங்கள் ஆசையை நிறைவேற்ற வந்தவர்கள் என்று சுருக்கிக்கொள்ள வேண்டாம்.

பெற்றோர் உணரவேண்டிய மற்றொரு விஷயம், இப்போது நீங்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பு வருங்காலத்தில் தவறானதாக அமைந்துவிட்டால், அதற்காக நீங்கள் வாழ்நாள் முழுதும் குற்ற உணர்வுடன் வாழ்வேண்டிவரும். எனவே, ஒட்டுமொத்தக் குடும்பமும் உட்கார்ந்து பேசி ஒரு தீர்வைக் கண்டறிய வேண்டும். உதாரணமாக, ஒரு மாணவர் கணிதத்தில் திறமைசாலியாக இருக்கிறார். அவர் என்ஜினீயரிங் படிக்க ஆசைப்படுகிறார். ஆனால் அவருடைய தந்தை அவரை ஆசிரியர் பயிற்சியில் சேர்க்கிறார். அந்த ஆசிரியர் பயிற்சி அனுமதி பெறாதது, நீதிமன்றம் அதனை பாதியில் மூடிவிடுகிறது. அந்தத் தந்தைக்கு மிகவும் வருத்தம். ஆனால், இனிமேல் எதுவும் செய்யமுடியாது. ஆகவே, அந்த மகன் வாழ்நாள் முழுவதும் தன் தந்தையைக் குற்றம் சொல்லிக்கொண்டிருந்தான். உங்களுக்குத் தரப்பட்டிருப்பது ஒரே ஒரு வாழ்க்கைதான். ஒருவேளை நீங்கள் மறுபடி பிறந்தாலும் கூட மீண்டும் இதே நபராகப் பிறக்கமுடியாது. ஆகவே, இந்த வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்.

நீங்கள் உங்கள் உறவினர்கள் அல்லது நண்பர்களைப் பார்த்துப் ஒரு படிப்பைத் தேர்ந்தெடுத்துள்ளீர்களா?

சின்ன வயதில் ஒரு பையன் ஐஸ் க்ரீம் விற்பவரைப் பார்த்து அதுபோல் ஆக விரும்புகிறான். அப்போதுதானே நாள்முழுவதும் ஐஸ் க்ரீம் சாப்பிட்டுக் கொண்டே இருக்கமுடியும்! மற்றொரு நாள் ஒரு டிரைவரைப் பார்த்துப் பரவசப்படுகிறான். அவரைப்போலவே எப்போதும் பயணம் செய்துகொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறான். இதுபோல் நமக்கு பல ஆசைகள் வரலாம். ஆனால் அனைத்துமாக நாம் ஆனால் என்னவாகும் நம் எதிர்காலம்?

உங்கள் நண்பரின் தந்தை தன் மகன் ஒரு படிப்பை முடித்தபிறகு அதே துறையில் அவனுக்கு வேலை கிடைக்க உதவி செய்பவராக இருக்கலாம். ஆனால் நீங்கள் படிப்பை முடித்தபிறகு நீங்களேதான் சொந்தக் காலில் நிற்கவேண்டியிருக்கும். எனவே உங்கள் நண்பர், உறவினரிடம் பேசும்போது அவர்கள் எந்தக் காரணத்துக்காக இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுத்தார்கள் என்று விவாதியுங்கள். அந்தக் காரணம் உங்களுக்குப் பொருந்துமா என்று யோசியுங்கள்.

ஒரு வீட்டில் பெற்றோர் மருத்துவராக இருந்தால் அவர்களுக்குச் சொந்தமாக ஒரு மருத்துவமனை இருக்கலாம். ஆகவே அவர்கள் தங்கள் பிள்ளைகளும் மருத்துவம் படிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். படித்து முடித்தபிறகு அந்தப் பிள்ளைகள் வேலை தேடுவதைப்பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் அது உங்களுக்குப் பொருந்துமா? யோசித்துக்கொள்ளுங்கள்

நீங்கள் சமீபத்திய வேலை வாய்ப்பு சந்தை ஏற்றதாழ்வுகள் அடிப்படையில், அதிக சம்பளம் கிடைக்கக்கூடிய ஒரு படிப்பை தேர்ந்தெடுக்கிறீர்களா?

வேலை வாய்ப்பு சந்தையின் ஏற்றத்தாழ்வுகள் ஒரு சுழற்சியாகவே பார்க்கப்படுகிறது. ஒரு படிப்பைத் தேர்ந்தெடுக்கச் சம்பளம் மட்டும் சரியான அளவுகோல் அல்ல. நம்முடைய சந்தை என்பது சுழற்சிபோல மாறி மாறி வரும். ஒருகாலத்தில் வங்கியில் பணிபுரிவது மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தது. அதன்பிறகு மருத்துவர்கள், இப்போது ஐடி (தகவல் தொழில்நுட்பம்), தற்போது தகவல் தொழில்நுட்பம் கொஞ்சம் தொய்வுடன் காணப்படுகிறது. ஆகவே, நீங்கள் இப்போது விரும்பித் தேர்ந்தெடுக்கும் படிப்பு முடியும்போது அல்லது அதன்பிறகு இதேமாதிரி மதிப்பு இருக்கும் என்பது நிச்சயமில்லை. அது உங்கள் பணி/வாழ்க்கையைப் பாதிக்குமா என்று நன்றாக யோசித்துக் கொள்ளுங்கள். ஆனால் எந்த காலத்திலும் எல்லா துறையிலும் உரிய தகுதியுடன், கடின உழைப்புடன், போதிய துறை அறிவுடன் விளங்குபவர்களுக்கு வேலைகள் காத்திருக்கின்றன. எனவே நீங்கள் வாங்கும் கோல்ட் மெடல் முக்கியமில்லை. அந்த துறையில் எவ்வளவு ஆழமாக அறிவைப் பெற்றுள்ளீர்கள், பணி செய்ய தயாராகி வருகிறீர்கள் என்பதே முக்கியம்.

படிப்பு முடிந்து நீங்கள் பார்க்கப்போகும் வேலை உங்களுக்குப் பிடிக்காவிட்டால், உங்களால் சிறப்பாகப் பணியாற்ற முடியாது. இதனால் வாழ்நாள் முழுவதும் சலிப்பாக உணர்வீர்கள். அதேசமயம், அந்த வேலை உங்களுக்குப் பிடித்திருந்தால் விளையாட்டு மைதானத்துக்குச் செல்வதுபோன்ற உற்சாகத்தோடு அலுவலகத்துக்குக் கிளம்பிச் செல்வீர்கள்.

ஒவ்வொரு துறையிலும் அதிகச் சம்பளம் பெறும் வேலைகள், குறைந்த சம்பளம் பெறும் வேலைகள் உண்டு. நீங்கள் எவ்வளவு உயரம் செல்கிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்கள் சம்பள விகிதமும் மாறும். இன்றைக்கு C.A., Animation, Bio Technology போன்ற மற்ற பல துறைகளும் ஐ.டி.க்கு இணையாக அதிகச் சம்பளம் தரக்கூடியவையாக இருக்கின்றன. ஆரம்பத்தில் நீங்கள் சம்பளத்திற்காக உள்ளே நுழையும்போது நன்றாக இருக்கலாம். ஆனால் நீங்கள் வளர வளர அந்த உற்சாகம் நின்றுவிடும்.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags