தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்துள்ளது.
202 மையங்களில் நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் 2 முதல் 24-ம் தேதி வரை நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 8.16 லட்சம் பேர் எழுதினர். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் கடந்த மே 27-ம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள 202 மையங்களில் தொடங்கியது.
43,000 ஆசிரியர்கள், 48 லட்சம் விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மே 27-ம் தேதி முதல் ஜூன் 9-ம் தேதி வரை நடைபெற்ற விடைத்தாள் திருத்தும் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளதாகவும், மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணிகள் அடுத்த 10 நாட்களில் நிறைவடையும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே கொரோனா தொற்று அச்சம் காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதி நடைபெற்ற 12-ம் வகுப்பு இறுதித் தேர்வை 36,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதாத நிலையில், அவர்களுக்கு மறு வாய்ப்பு தேர்வு வரும் ஜூன் 18-ம் தேதி நடைபெறவிருந்த நிலையில், அந்தத் தேர்வை ஒத்திவைப்பதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், இறுதித் தேர்வை எழுதாத மாணவர்கள் இறுதித் தேர்வை மட்டும் எழுதவில்லையா? அல்லது அதற்கு முந்தைய தேர்வுகளையும் எழுதவில்லையா என்பதை ஆராய்ந்து, பெரும்பாலான மாணவர்கள் முந்தைய தேர்வுகளையும் எழுதாமல் இருந்தால், திட்டமிட்டபடி 12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும், அப்படி இல்லாத பட்சத்தில் மறு வாய்ப்பு தேர்வை நடத்திய பிறகே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.