1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

சருமத்தை பட்டுப்போல் பராமரிக்க உதவும் தேன்..

சருமத்தை பட்டுப்போல் பராமரிக்க உதவும் தேன்...!!



# தேனில் அதிக மருத்துவ குணங்கள் இருப்பதினால் உங்கள் முகத்தில் ஏற்படும் முகப்பருக்கள், வறண்ட சருமம், எண்ணெய் சருமம், கரும்புள்ளிகள் மற்றும்  சென்சிட்டிவ் சருமம் போன்றவைகளில் இருந்து உண்டாகும் பிரச்சினைகளிலிருந்து தேன் நம்மை காப்பாற்றுகிறது.


# தேனில் ஆன்டி-பாக்டீரியல் குணங்கள் இருப்பதினால் நம் முகத்தில் இருக்கும் துளைகளை இது அகற்றுகிறது. இதனால் முகப்பருக்கள் ஏற்படாமல் நம்மை  பாதுகாக்கிறது. 
 

# தேன் எப்போதும் முக அழகை பாதுகாக்க கூடிய ஒன்றாகும். தேனில் அதிகமான ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் தன்மை நிறைந்துள்ளது. தேனானது உங்களை எப்போதும் இளமையாக வைத்திருக்கும்.
 

# தேன் உடலை ஈரப்பதமாகவும் மென்மையாகவும் வைத்திருக்கும் ஒரு சிறப்பான இயற்கை மருந்தாகும். வறண்டு காணப்படும் சருமத்தை முற்றிலும் நீக்கிவிடும் தன்மை கொண்டுள்ளது.


# தேனுடன் மஞ்சள் தூள் சேர்த்த பிறகு கற்றாழை ஜெல் 1/2 டேபிள் ஸ்பூன் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும். பேஸ்ட் போல் வந்த பிறகு  உடலில் வறண்ட சருமம் காணப்படும் இடத்தில் இந்த தேன் ஃபேஸ் பேக்கை தடவ வேண்டும். பேஸ்டை தடவிய பிறகு 15 அல்லது 20 நிமிடம் கழித்து இதை  வாஷ் செய்து கொள்ளலாம். வாஷ் செய்த பிறகு உங்களுடைய சருமம் மற்றும் தோல் பகுதியானது எப்போதும் ஃப்ரெஷாக இருக்கும். 
 

# எண்ணெய் சருமம் உள்ளவர்கள் தேன், ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் கிராம்புகளை பொடியாக்கி ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். இதை முகத்தில் தடவி 15  நிமிடங்கள் ஊற வைத்து பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவினால் உங்கள் எண்ணெய் சருமம் உள்ள முகத்தை அழகான சருமமாக மாற்றி விடும்.
 

# கரும்புள்ளி உள்ள சருமத்தில் தேன், தயிர் எலுமிச்சை சாறு மற்றும் மஞ்சள் தூளை ஒன்றாக கலந்து கரும்புள்ளி இருக்கும் இடத்தில் அல்லது முகம் முழுக்க  இதைத் தேய்த்து 15 நிமிடங்கள் ஊற வைத்து பின்பு முகத்தை கழுவினால் நாளடைவில் உங்கள் முகத்தில் ஏற்பட்டு இருக்கும் கரும்புள்ளிகள் மறைந்து உங்களை  அழகாக பெண்ணாக மாற்றி விடும்
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags