1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

அத்தியின் ஆரோக்கியம் சார்ந்த நன்மைகள் (Health benefits of Fig)

அத்தியின் ஆரோக்கியம் சார்ந்த நன்மைகள் (Health benefits of Fig)


அத்தி, சமையலறைகளிலும் மற்றும் குளிரூட்டிகளிலும் தனது வழியை மிக நன்றாகக் கண்டறிந்து கொள்கிறது. இந்தப் பழத்தின் இனிய மொறுமொறுப்புத்தன்மையை, உண்மையிலேயே ஏதேனும் உணவுக்குப் பின் அருந்தும் பதார்த்தங்களில் நீங்கள் சேர்க்கும் பொழுது, அதன் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் சார்ந்த நன்மைகளும், இந்த பழத்தினால் அதிகரிக்க மட்டுமே செய்கின்றன. உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு, அத்தி நன்மையளிப்பதாக இருக்கும் வழிகளில் சிலவற்றை நாம் ஆராயலாம்.

மலச்சிக்கலில் இருந்து நிவாரணம்அளிக்கிறது: அத்தி ஒரு நல்ல அளவில் உணவு சார்ந்த நார்ச்சத்தினைக் கொண்டிருக்கின்றது. இந்த நார்ச்சத்து, உங்கள் குடல்களில் உள்ள உணவுக்கு திரட்சியை சேர்க்கிறது, மேலும் மலத்தை இளக்குகிறது, அதன் மூலம் உடலில் இருந்து அவை எளிதாக வெளியேற்றப்பட, வசதியான நிலையை உருவாக்குகிறது. மேலும் கூடவே இது, மலச்சிக்கலுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றான மலம் கழித்தலை முறைப்படுத்த உதவுகிறது.


எடையைக் குறைக்க உதவுகிறது: அத்திப்பழங்கள், நார்ச்சத்து நிறைந்த, கலோரிகள் குறைவான பழங்கள் ஆகும், அவை உங்கள் கலோரிகள் எண்ணிக்கையை அதிகரிக்காமலே, நீண்ட நேரத்துக்கு உங்கள் வயிறு நிரம்பி இருப்பது போன்றே உங்களை உணரச் செய்கின்றன. ஒரு சிறந்த உடல் எடைக் குறைப்பு உணவில், இதைத் தவிர உங்களுக்கு வேறு என்ன வேண்டும்? இருந்தாலும், பாலுடன் எடுத்துக் கொள்ளப்படும் போது, பதிலாக உடல் எடையை அதிகரிக்க இது காரணமாகக் கூடும். 


கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது: அத்திப்பழங்கள், கண் பார்வையை பராமரிக்க மற்றும் கண்பார்வை இழப்பைத் தடுக்கும் பொறுப்பை உடைய, ஒரு ஊட்டச்சத்தான வைட்டமின் ஏ- வை ஏராளமான அளவில் கொண்டு இருக்கின்றன. இது மட்டும் அல்லாமல், தற்போதைய காலத்தில் குணப்படுத்த இயலாததாக இருக்கின்ற, சீர் குலைவு கண் குறைபாடுகளின் அபாயத்தை இவை குறைப்பதாகவும் கூடவும் நம்பப்படுகிறது. மேலும் அறிந்து கொள்ள ஒரு மருத்துவரிடம் பேசுவது மிகவும் நல்லது.


இரவில் ஒரு நல்ல உறக்கத்தை வழங்குகிறது: உங்கள் உறக்க-விழிப்பு சுழற்சிகளை முறைப்படுத்துகிற மற்றும் உறக்கமின்மை பிரச்சினையை கையாள உதவுகிற, மெலட்டோனின் உற்பத்தியை உடலில் அதிகரிக்க, அத்திப்பழங்கள் உதவுவதாக ஆராய்ச்சி சான்றுகள் தெரிவிக்கின்றன. கூடவே அது, உங்கள் மூளையில் செரோட்டொனின் அளவுகளையும் அதிகரிக்கிறது. இது மன அழுத்தம் மற்றும் பதற்றத்தைக் குறைத்து நீங்கள் நன்கு உறங்க உதவுகிற மகிழ்ச்சி ஹார்மோன் ஆகும்.


மூல நோயிலிருந்து விடுதலையை வழங்குகிறது: மலம் கழித்தலை முறைப்படுத்தல் மற்றும் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிப்பதன் மூலமாக, அத்திப்பழங்கள், உங்கள் மூல திசுக்களின் மீதான அதிகப்படியான அழுத்தத்தில் இருந்து நிவாரணம் பெற உதவுகின்றன. மலத்தை இளக்கி மற்றும் அவை எளிதாக வெளியேற்றப்பட உதவுவதன் காரணமாக, அது மலக்குடல் அல்லது மலவாயில் எரிச்சலை ஏற்படுத்தாது, அதனால் மூல நோய் வராமல் தடுக்கப்படுகிறது.


கல்லீரல் செயல்பாட்டினை மேம்படுத்துகிறது: அத்திப்பழங்கள், ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகள் மற்றும் ஊட்டச்சத்து மூலப்பொருட்களின் ஒரு களஞ்சியத்தைக் கொண்டிருக்கின்றன. முந்தைய ஆய்வுகள், இந்த மூலப்பொருட்கள், கல்லீரல் சேதத்தைத் தடுக்கின்றன மற்றும் கல்லீரலின் நச்சுக்களை நீக்கும் திறனை அதிகரிக்கின்றன எனத் தெரிவிக்கின்றன. இருப்பினும், மனிதர்கள் மீது பயன்படுத்தும் அளவுகள் மற்றும் விளைவுகளை உறுதி செய்ய, மேலும் அதிக ஆய்வுகள் தேவைப்படுகின்றன.


மிகச் சிறந்த ஆக்சிஜனேற்ற எதிர்ப்பி: ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகள் என்பவை, அடிப்படைக் கூறுகளின் சேதத்தை தடுத்து முதுமை அடைவதைத் தாமதப்படுத்துகின்ற மூலப்பொருட்கள் ஆகும். ஒரு இயற்கையான ஆக்சிஜனேற்ற எதிர்ப்பி என்ற வகையில், முதுமை தொடர்பான உறுப்புகள் செயல்பாடு மோசமடைதலைத் தடுக்கவும், அதே நேரத்தில், சுருக்க கோடுகள் மற்றும் கரும்புள்ளிகள் போன்ற முதுமைக்கு முன்பாக தோன்றக் கூடிய அறிகுறிகளைக் குறைக்கவும் உதவுகின்றன.


இரத்த சோகை உள்ளவர்களுக்கு நன்மையளிக்கிறது: அத்திப்பழங்கள், இரும்புச்சத்துக்கான ஒரு நல்ல ஆதாரம் ஆகும். தொடர்ச்சியாக அத்திப் பழங்களை உட்கொள்வது, உங்கள் உடலில் ஹீமோகுளோபின் அளவையும் இரத்த சிகப்பு அணுக்களையும் அதிகரிக்க உதவுவதன் வழியாக, இரும்புச்சத்து குறைபாட்டு இரத்த சோகையைத் தடுக்க மிகவும் பயனுள்ளது எனக் கண்டறியப்பட்டு உள்ளது.


இரத்த சர்க்கரை அளவுகளைக் கட்டுப்படுத்துகிறது: ஆராய்ச்சிகள், அத்திப்பழத்தின் ஹைபோகிளைசெமிக் (இரத்த சர்க்கரையை குறைத்தல்) செயல்பாட்டினை நிரூபிக்கின்றன. இது இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது மற்றும் உங்கள் இரத்த ஓட்டத்தில் இருந்து அதிகப்படியான சர்க்கரையை உள் வாங்கிக் கொள்வதை மேம்படுத்துகிறது, அதன் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் உதவுகிறது.


சருமத்துக்கு நன்மை அளிக்கிறது: அத்திப்பழங்கள், உங்கள் சருமத்துக்கான ஊட்டச்சத்து மற்றும் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகளின் ஒரு நல்ல ஆதாரத்தை வழங்குகின்றன. இது அடிப்படைக் கூறு சார்ந்த சேதத்தை குறைத்து உங்கள் சருமத்தை, அதிக மிருதுவாக மற்றும் இளமையாகத் தோன்ற செய்கிறது. பருக்களை நீக்குவதில் கடுங்குளிர் சிகிச்சை அளவுக்கு, அத்தி மரப்பால் பூசுதலும், நன்மை வாய்ந்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.


முடி உதிர்வைத் தடுக்கிறது: உங்கள் சருமத்தைப் போன்றே, அத்திப்பழங்கள் உங்கள் உச்சந்தலைக்கும் ஊட்டம் அளிக்கின்றன. வைட்டமின் இ மற்றும் கே ஆகியவற்றின் ஒரு நல்ல ஆதாரமாக இருப்பதால், அது உங்கள் முடியின் இயற்கையான பளபளப்பைப் பராமரிக்க உதவுகிறது, முடி வெள்ளையாவதைத் தடுக்கிறது மற்றும் அதிகப்படியான முடி உதிர்வையும் கூடக் குறைக்கிறது.


இருமல் மற்றும் ஜலதோஷ நிவாரணி: பாரம்பரியமாக, அத்திப்பழ சாறு, இருமல் மற்றும் ஜலதோஷத்துக்கான ஒரு மிகச் சிறந்த நிவாரணியாக அறியப்படுகிறது. இது, உங்கள் நுரையீரல்கள் மற்றும் சுவாசப் பாதைகளில் இருந்து சளியை வெளியேற்றுவதில் உதவுவதோடு மட்டும் அல்லாமல், உங்கள் தொண்டை தசைகளை வலுவாக்குவதற்கும் கூட இது உதவுகிறது மற்றும் அந்த பிரச்சினை மறுபடி வருவதையும் தடுக்கிறது.


இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது: இரத்த அழுத்தத்தின் மீது, அத்திப் பழம் உட்கொள்வதால் ஏற்படும் சாதகமான விளைவுகளை ஆய்வுகள் காட்டி இருக்கின்றன. அத்தி, உங்கள் இதயத்தின் மீதான சோடியத்தின் எதிர்மறையான விளைவுகளை சமன் செய்ய உதவுகின்ற, ஒரு தாதுப் பொருளான பொட்டாசியத்தைக் கணிசமான அளவு கொண்டிருக்கிறது. 


சிறுநீரக செயல்பாட்டினை மேம்படுத்துகிறது: அத்திப்பழங்கள், சிறுநீரை அதிகரிக்கும் தன்மைகளைக் கொண்டிருப்பதாக அறியப்படுகின்றன. உங்களை அதிகம் சிறுநீர் கழிக்க வைப்பதன் மூலம், சிறுநீரகத்துக்கு நன்மை அளிக்கக் கூடிய வகையில், உங்கள் உடலில் இருந்து அதிகப்படியான நச்சுக்களை வெளியேற்ற அவை உதவுகின்றன. 


காய்ச்சலைக் குறைக்கிறது: மருத்துவ ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டு இருப்பதன் படி, அத்தி இலைகளின் எத்தனால் கலந்த சாறு, ஒரு வலுவான காய்ச்சலைத் தணிக்கும் செயல்பாட்டினை வெளிப்படுத்துகின்றது. 5 மணி நேரங்களுக்கும் மேல், செயல் வினையில் நீடிப்பதால், இதன் செயல்பாடு, பெரும்பாலான வணிக ரீதியிலான காய்ச்சல் தணிப்பான்களை விட அதிக சக்தி வாய்ந்தது எனக் கூறப்படுகிறது.  


உறுதியான எலும்புகளுக்காக அத்திப்பழங்கள்: அத்திப்பழங்கள், எலும்பு அமைப்பினை பராமரிப்பதற்கான பொறுப்பையுடைய, 3 மிகவும் முக்கியமான தாதுப் பொருட்களைக் கொண்டிருக்கின்றன. அவை கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் ஆகியவை ஆகும். தொடர்ந்து அத்திப்பழங்களை உட்கொண்டு வருவது உங்கள் எலும்புகளை உறுதியாக வைத்திருக்கிறது மற்றும் எலும்பு முறிவுகள் அபாயத்தைக் குறைக்கிறது. 


கர்ப்பிணி பெண்களுக்கு நன்மை அளிக்கக் கூடியது: அத்திப்பழத்தின் ஊட்டச்சத்து மிக்க தன்மைகள், அதனை, கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு பொருத்தமான உணவுக்கு மேல் சேர்க்கை உணவாக ஆக்குகிறது. இந்தப் பழத்தில் இருக்கின்ற வைட்டமின் பி, ஆரம்ப கட்ட கர்ப்ப நிலையில் ஏற்படும் காலை நேர பலவீனத்தில் இருந்து விடுபட உதவுவதாக அறியப்படுகிறது மற்றும் இதன் கால்சியம் சத்துக்கள், மகப்பேறு எலும்புகள் பலவீனம் அடைவதில் இருந்து பாதுகாக்கிற அதே நேரத்தில், கருவின் வளர்ச்சியிலும் கூட உதவுகிறது.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags