1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

தமிழகம் முழுதும் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு

தமிழகம் முழுதும் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு

நிவர் புயல் காரணமாக தமிழகம் முழுதும் நாளை (நவ.,25) அரசு விடுமுறை விடப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

நிவர் புயல் அதி தீவிர புயலாக மாறி நாளை (நவ.,25) கரையை கடக்கவுள்ள நிலையில், நிவர் புயல் தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடலோர மாவட்டங்களில் அரசு தனிக்கவனம் செலுத்துகிறது. தாழ்வான பகுதிகளில் 4,133 இடங்களில் கலெக்டர்கள் தனிக்கவனம் செலுத்த அறிவுறுத்தியுள்ள மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


latest tamil news


நிவர் புயல் காரணமாக நாளை தமிழகம் முழுதும் அரசு விடுமுறை விடப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்காகவே அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளில் உள்ள அரசு அலுவலர்கள் மட்டும் நாளை பணிபுரிவார்கள். அவர்களுக்கு பணி நிலைமைக்கு ஏற்றவாறு விடுமுறை நீடிப்பது குறித்து முடிவெடுக்கப்படும். புயல் கரையை கடந்து சென்றுவிட்டது என அறிவிக்கப்படும் வரை மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை. நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

செம்பரம்பாக்கம் ஏரியில் மழை பெய்வதை பொறுத்துதான் உபரி நீர் திறக்கப்படும்.ஏரிகளின் கரைகளை பலப்படுத்தவும், மணல் மூட்டைகளை தயார்நிலையில் வைத்திருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளன. மக்களுக்காக அரசு இருக்கிறது, எதிர்க்கட்சிகள் என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags