1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு தர கோரிக்கை

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு தர கோரிக்கை


'பகுதி நேர ஆசிரியர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின், மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை:கடந்த, 2012ல், 16 ஆயிரத்து, 549 பகுதி நேர ஆசிரியர்களை, 5,000 ரூபாய் தொகுப்பூதியத்தில், ஜெயலலிதா நியமித்தார்.தற்போது, 12 ஆயிரம் பேர் மட்டும் பணி புரிகின்றனர். அவர்களுக்கு, 7,700 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது.அதாவது, 2014 மற்றும் 2017ம் ஆண்டுகளில், அனைவருக்கும் கல்வி இயக்க தொகுப்பூதிய பணியாளர்களுக்கு, சம்பளத்தை உயர்த்தும் போது, பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கும், சம்பளம் உயர்த்தி வழங்கப்பட்டது.

இம்மாதம், 'சமக்ரா சிக் ஷா' தொகுப்பூதிய பணியாளர்களுக்கு, 20 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க, ஒருங்கிணைந்த கல்வி மாநில திட்ட இயக்குனர், இம்மாதம், 16ம் தேதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.எனவே, பகுதி நேர ஆசிரியர்களுக்கும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும்; காலதாமதம் செய்ய வேண்டாம்.இவ்வாறு, செந்தில்குமார் கூறியுள்ளார்.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags