1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

மத்திய அரசு அலுவலகங்களில் 50% பணியாளர்கள் நடைமுறை மே இறுதி வரை தொடரும்

மத்திய அரசு அலுவலகங்களில் 50% பணியாளர்கள் நடைமுறை மே இறுதி வரை தொடரும்


கரோனா தொற்றுப் பரவல் கட்டுக்குள் வராததால், மத்திய அரசின் துறைகளைச் சார்ந்த அலுவலகங்களில் 50 சதவீத பணியாளர்கள் மட்டுமே பணியாற்றும் நடைமுறை இந்த மாத இறுதி வரை தொடரும் என்று மத்திய பணியாளர் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கடந்த மாதத்தில் இருந்து கரோனா தொற்றின் 2-ஆவது அலை பரவி வருகிறது. அதையடுத்து, கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசின் துறைகளைச் சார்ந்த அலுவலகங்களுக்கான கட்டுப்பாடுகளை மத்திய பணியாளர் நல அமைச்சகம் கடந்த மாதம் வெளியிட்டது.
 அக்கட்டுப்பாடுகள் அனைத்தும் மே மாத இறுதி வரை அமலில் இருக்கும் என்று அந்த அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இது தொடர்பாக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "அலுவலகங்களில் 50 சதவீத பணியாளர்கள் மட்டுமே நேரில் பணியாற்ற வேண்டும் என்ற கட்டுப்பாடு தொடர்ந்து அமலில் இருக்கும். அதேவேளையில், துணைச் செயலருக்கு நிகரான பதவியில் உள்ள அதிகாரிகள் அனைவரும் நாள்தோறும் அலுவலகத்துக்கு வர வேண்டியது கட்டாயமாகும்.


அலுவலகத்தில் ஒரே நேரத்தில் பணியாளர்கள் கூடுவதைத் தவிர்க்கும்பொருட்டு பணி நேரம் 9 மணி முதல் 5.30 மணி வரை, 9.30 மணி முதல் 6 மணி வரை, 10 மணி முதல் 6.30 மணி வரை என 3 கட்டங்களாக மாற்றப்பட்டிருந்தது. 

அந்த நடைமுறையும் தொடர்ந்து அமலில் இருக்கும். 
அலுவலகத்துக்கு வரும் அதிகாரிகள் அனைவரும் கரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும். முகக் கவசம் அணிவதையும், சமூக இடைவெளியையும் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டும். 


மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிகள் ஆகியோர் அலுவலகத்துக்கு நேரில் வருவதற்கு விலக்களிக்கப்பட்டுள்ளது. அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அவர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றலாம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags