டில்லியில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு
டில்லியில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டில்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் டில்லியில், 6,430 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 337 பேர் உயிரிழந்தனர். அங்கு ஏற்கனவே கடந்த ஏப்., 19ம் தேதியில் இருந்து முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஒவ்வொரு வாரமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில், நாளையுடன் (மே 17) ஊரடங்கு முடிகிறது.
இந்நிலையில், மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மே 24ம் தேதி காலை 5 மணிவரை ஊரடங்கு நீட்டிக்கும் எனவும், அதுவரை மெட்ரோ ரயில்கள் உள்ளிட்ட எதுவும் இயக்கப்படாது எனவும் தெரிவித்தார். மேலும், முழு ஊரடங்கு காரணமாக டில்லியில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாகவும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.