பள்ளி கல்வி கமிஷனராக நந்தகுமார் பதவியேற்பு
தமிழக பள்ளி கல்வித்துறை கமிஷனராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி நந்தகுமார் பொறுப்பேற்றார். தமிழக பள்ளி கல்வித்துறை, அரசு செயலர் தலைமையில், பள்ளி கல்வி இயக்குனரகத்தின் கீழ் செயல்படுகிறது.
இதில், பல்வேறு பிரிவுகளுக்கு தனித்தனியாக இயக்குனர்கள் உள்ளனர். அனைத்து இயக்குனர்களுக்கும் தலைமை பொறுப்பில், பள்ளி கல்வி இயக்குனர் உள்ளார்.இந்த பொறுப்பில் இதுவரை, துறை ரீதியாக பதவி உயர்வு பெற்ற அதிகாரிகளே அமர்த்தப்பட்டனர். இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, பள்ளி கல்வி தலைமை பொறுப்பில், அதிரடி சீர்திருத்தம் செய்துள்ளது.தொழில்நுட்ப கல்வி துறையில் உள்ளது போல, இயக்குனர் பொறுப்பில், ஐ.ஏ.எஸ்., அதிகாரியை நியமித்துள்ளது.தற்போது, அந்த பதவியில் நேரடி ஐ.ஏ.எஸ்., அதிகாரியை நியமித்து, கமிஷனர் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி கல்வியின் இயக்குனர் பதவியில், முதல் ஐ.ஏ.எஸ்.,சாக, நந்தகுமார் நேற்று பொறுப்பேற்றார். கடந்த, 200 ஆண்டுகளுக்கு பின், தலைமை பொறுப்பேற்கும் முதல், ஐ.ஏ.எஸ்., என்ற வரலாறு படைத்து உள்ளார். நாமக்கல் மாவட்டத்தில், ஏழை குடும்பத்தைச் சேர்ந்த தொழிலாளி கருப்பண்ணனின் மகனான இவர், 2006ம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் தேசிய அளவில், 30ம் இடம் பிடித்து, சாதனை படைத்தார். தமிழ் வழியில் படித்த இவர், ஐ.ஏ.எஸ்., பதவியில் நேர்மையாக இருப்பவர். பள்ளி கல்வித்துறையில் பல முன்னேற்றங்களை படைப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கிடையில், பள்ளி கல்வி இயக்குனர் என்ற தலைமை பொறுப்பில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமிக்கப்பட்டதற்கு, பல்வேறு சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.தவறான முடிவுபா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகத்தில், பள்ளிக்கல்வி இயக்குனர் என்ற பதவியை ரத்து செய்து, இனி, அந்த பணிக்கான பொறுப்புகளை பள்ளிக்கல்வி ஆணையரே கையாள்வார் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. நிர்வாக சீர்திருத்தம் என்ற பெயரில், அரசு எடுத்துள்ள இந்த தவறான முடிவு, நிர்வாக சீர்குலைவையே ஏற்படுத்தும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
இதில், பல்வேறு பிரிவுகளுக்கு தனித்தனியாக இயக்குனர்கள் உள்ளனர். அனைத்து இயக்குனர்களுக்கும் தலைமை பொறுப்பில், பள்ளி கல்வி இயக்குனர் உள்ளார்.இந்த பொறுப்பில் இதுவரை, துறை ரீதியாக பதவி உயர்வு பெற்ற அதிகாரிகளே அமர்த்தப்பட்டனர். இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, பள்ளி கல்வி தலைமை பொறுப்பில், அதிரடி சீர்திருத்தம் செய்துள்ளது.தொழில்நுட்ப கல்வி துறையில் உள்ளது போல, இயக்குனர் பொறுப்பில், ஐ.ஏ.எஸ்., அதிகாரியை நியமித்துள்ளது.தற்போது, அந்த பதவியில் நேரடி ஐ.ஏ.எஸ்., அதிகாரியை நியமித்து, கமிஷனர் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி கல்வியின் இயக்குனர் பதவியில், முதல் ஐ.ஏ.எஸ்.,சாக, நந்தகுமார் நேற்று பொறுப்பேற்றார். கடந்த, 200 ஆண்டுகளுக்கு பின், தலைமை பொறுப்பேற்கும் முதல், ஐ.ஏ.எஸ்., என்ற வரலாறு படைத்து உள்ளார். நாமக்கல் மாவட்டத்தில், ஏழை குடும்பத்தைச் சேர்ந்த தொழிலாளி கருப்பண்ணனின் மகனான இவர், 2006ம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் தேசிய அளவில், 30ம் இடம் பிடித்து, சாதனை படைத்தார். தமிழ் வழியில் படித்த இவர், ஐ.ஏ.எஸ்., பதவியில் நேர்மையாக இருப்பவர். பள்ளி கல்வித்துறையில் பல முன்னேற்றங்களை படைப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கிடையில், பள்ளி கல்வி இயக்குனர் என்ற தலைமை பொறுப்பில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமிக்கப்பட்டதற்கு, பல்வேறு சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.தவறான முடிவுபா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகத்தில், பள்ளிக்கல்வி இயக்குனர் என்ற பதவியை ரத்து செய்து, இனி, அந்த பணிக்கான பொறுப்புகளை பள்ளிக்கல்வி ஆணையரே கையாள்வார் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. நிர்வாக சீர்திருத்தம் என்ற பெயரில், அரசு எடுத்துள்ள இந்த தவறான முடிவு, நிர்வாக சீர்குலைவையே ஏற்படுத்தும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.