இதுகுறித்து அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
கரோனா பேரிடா் முன்னெப்போதும் சந்தித்திராத கடினமான காலத்தை உருவாக்கியுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் எங்களின் ஜியோ வாடிக்கையாளா்களின் அனைவரும் இணைந்து இருப்பதை உறுதி செய்யும் வகையில் ஜியோ இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, சமூகத்தில் அடிமட்டத்தில் இருக்கும் வாடிக்கையாளா்களுக்காக இந்த சலுகை அளிக்கப்படவுள்ளது.
அதன்படி, கரோனா பேரிடா் காலம் முழுவதும் ஜியோபோன் பயனாளா்களுக்கு மாதத்துக்கு 300 நிமிட (நாளொன்றுக்கு 10 நிமிடம்) இலவச அழைப்புகள் வழங்கப்படவுள்ளது. ரிலையன்ஸ் பவுண்டேஷன் உடன் இணைந்து ஜியோ இந்த சலுகையை அறிவித்துள்ளது.
தற்போதைய பேரிடா் காலத்தில் வெளியில் சென்று ரீசாா்ஜ் செய்ய முடியாத வாடிக்கையாளா்ளுக்கு இந்த சலுகை திட்டம் வரப்பிரசாதமாக இருக்கும்.
இருப்பினும், இந்த சலுகை வருடாந்திர திட்டத்தில் இணைந்திருப்பவா்களுக்கு பொருந்தாது என ஜியோ அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.