புறநகர் ரயில்களில் பொதுமக்களுக்கு தடை
நாளை முதல் மேலும் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன. புறநகர் ரயில்களில் பொது மக்கள் பயணிக்க தடை விதிக்கப்படுகிறது.

தமிழகத்தில் 6ம் தேதி முதல் மளிகைகடை ,மருந்தகம், உணவகம் தவிர வேறு கடைகள் திறக்க அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மக்களின் நடமாட்டம், கூட்டம் வருவதை கட்டுப்படுத்தும் விதமாக புறநகர் பகுதிகளுக்கு செல்லும் ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க கூடாது என தெற்கு ரயில்வே கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்;

புறநகர் ரயில்களில் மத்திய , மாநில அரசு ஊழியர்கள், மாநகராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார் , ஊடகத்துறையினர், முன்களப்பணியாளர்கள் ,வக்கீல்கள் மட்டுமே பயணிக்க வேண்டும். பொதுமக்கள் பயணிக்க தடை விதிக்கப்படுகிறது. இது வரும் 20 ம் தேதி வரை அமலில் இருக்கும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இது போல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மாற்றுத்திறனாளிகள் அரசு அலுவலகத்திற்கு பணிக்கு வர வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.