உடம்பில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது அது உடலில் சிறுநீரகம், இதயம், இரத்த நாளங்கள், எலும்புகளையும் கூட இவ்வியாதி பாதிக்கிறது. இதன் அறிகுறிகள் வரும்போதே எச்சரிக்கையாக இருந்தால் அது உங்கள் கால்களை பாதிக்காமல் கட்டுக்குள் வைக்க முடியும்.
அந்தவகையில் இதை கட்டுக்குள் வைக்க ஒரு சில தெய்வீக மூலிகைகள் உதவுகின்றது. தற்போது அவை குறித்து பார்க்கலாம்.
தேவையானவை
வேப்பிலை, வில்வம், அத்தி இலை, முருங்கை இலை, அருகம்புல், நெல்லி, நாவல்,சிறுகுறிஞ்சான்,கீழா நெல்லி,மாவிலை,வெற்றிலை, தும்பை எல்லாவற்றையும் சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி பொடித்து வைக்கவும். இதை கண்ணாடி பாட்டிலில் வைக்கவும்.
தினமும் உணவுக்கு முன்பாக கால் டீஸ்பூன் அளவு இதை எடுத்து நீரில் கலந்து பொறுமையாக குடிக்கவும்.
காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் ஆகாரத்துக்கு முன்பு எடுத்து கொள்ளவும். இந்த மூலிகை பொடி தொடர்ந்து எடுத்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். சர்க்கரை நோயால் வரக்கூடிய உபாதைகளை தவிர்க்க முடியும்.
சர்க்கரை நோய்க்கு அரிசி எதிரி என்பது உண்மையல்ல. இயற்கையான முறையில் விளைந்த பாரம்பர்ய கைக்குத்தல் அரிசி ரகங்கள் பெரும்பாலும் லோ கிளைசமிக் தன்மை உடையவை. வேகமாக ரத்தத்தில் சர்க்கரையைச் சேர்க்காதவை. கூடுதலாகக் கிடைக்கும் நார்ப் பொருளும், தவிட்டில் உள்ள `ஒரைசினால் ‘ எனும் ஆன்டிஆக்சிடன்ட்களும் சர்க்கரை நோய்க்கு நல்ல பயன் தருபவை. விஷயம் நாம் சாப்பிடும் அளவில் தான் இருக்கிறது. அதிக உடல் உழைப்பு இல்லாமல், ஏசி காரில் போய், நாள் முழுக்க நாற்காலியில் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு அரிசி சோற்றின் அளவு குறைவாக இருப்பது தான் நல்லது.
இன்றைக்குப் பெரும்பாலும் அரிசியும் கோதுமையும் பாலீஷ் செய்யப்பட்டு தான் விற்பனை செய்யப் படுகின்றன. வெளியிடங்களில் அரிசி உணவு தான் கிடைக்கிறது என்றால், அத்துடன் கீரை, காய்கறிகளைச் சேர்த்து, நன்கு பிசைந்து, மெதுவாக மென்று சாப்பிடுங்கள். சர்க்கரை ரத்தத்தில் கலக்கும் வேகத்தை கீரையின் நார்கள் மெதுவாக ஆக்கிவிடும்.
தரைக்கு அடியில் விளையும் கிழங்குகள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும். முக்கியமாக, உருளைக்கிழங்கை! கேரட்டும் பீட்ரூட்டும் வேண்டவே வேண்டாம்.
கோவைக்காய், கத்திரிக்காய், அவரைப்பிஞ்சு, வாழைப்பூ, சுண்டை வற்றல், முருங்கைக்கீரை, கொத்தமல்லி, புதினா… இவை சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல பலன் அளிக்கக்கூடியவை. பாகற்காயும் வெந்தயமும் சர்க்கரைநோய் கட்டுப்பட உதவுபவை.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.