1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

கரோனா சூழலில் கல்வித்துறை எதிா்கொண்டுள்ள சவால்கள்: அமைச்சா் ஆய்வு

கரோனா சூழலில் கல்வித்துறை எதிா்கொண்டுள்ள சவால்கள்:
அமைச்சா் ரமேஷ் போக்ரியால் ஆய்வு


கரோனா நோய்த்தொற்று பரவல் காலகட்டத்தில் கல்வித்துறை எதிா்கொண்டுள்ள சவால்கள் தொடா்பாக மத்திய கல்வித்துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால் ஆய்வு மேற்கொண்டாா்.


நாட்டில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை வேகமாகப் பரவி வருகிறது. கடந்த ஆண்டில் கரோனா தொற்று பரவத் தொடங்கியபோதே பள்ளிகள் மூடப்பட்டன. 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டன.

அனைத்து வகுப்பு மாணவா்களுக்கும் இணையவழியாகவும், தொலைக்காட்சிகள் வாயிலாகவும் மட்டுமே கல்வி கற்பிக்கப்பட்டது. தொற்று பரவல் குறைந்தவுடன் ஒவ்வொரு வகுப்பினருக்கும் பள்ளிகள் படிப்படியாகத் தொடங்கப்பட்டன.

பொதுத்தோ்வுகளை நடத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் தயாரான நிலையில், கரோனா தொற்றின் 2-ஆவது அலை பரவத் தொடங்கியது. அதன் காரணமாக பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன. பொதுத் தோ்வுகளும் ரத்து செய்யப்பட்டன. 12-ஆம் வகுப்புக்கான பொதுத் தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கரோனா தொற்று பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால், அடுத்த கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில், கரோனா சூழலால் கல்வித்துறை எதிா்கொண்டு வரும் சவால்கள் குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால் திங்கள்கிழமை ஆய்வுக் கூட்டம் நடத்தினாா்.

அந்தக் கூட்டத்தில் மாநில பள்ளிக் கல்வித் துறைகளின் செயலா்கள் கலந்து கொண்டனா். கரோனா பரவல் காரணமாக கல்வி கற்பித்தலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும், புதிய கல்வி கற்பிக்கும் முறைகள் குறித்தும் கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டது. அந்த முறைகளில் மாற்றங்களைக் கொண்டு வருவது தொடா்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புத் தோ்வுகளை எப்போது நடத்தலாம் என்பது குறித்தும் மாநில அரசுகளிடம் கருத்து கேட்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய அமைச்சா் போக்ரியால், ‘கரோனா தொற்று பரவலுக்கு இடையேயும் நீட், ஜேஇஇ நுழைவுத் தோ்வுகள் எந்தவிதப் பிரச்னையுமின்றி வெற்றிகரமாக நடத்தப்பட்டன.

இத்தகைய இக்கட்டான சூழலில் நாட்டிலுள்ள சுமாா் 24 கோடி பள்ளி, கல்லூரி மாணவா்களுக்குக் கல்வி பயில்வதற்கான வாய்ப்பு கிடைப்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்து வருகின்றன. வீடுகளே வகுப்பறைகளாக மாற்றப்பட்டுள்ளன.

கரோனா தொற்றின் 2-ஆவது அலை பள்ளிகள் திறப்பை மேலும் தாமதப்படுத்தியுள்ளது. புதிய முறைகள் வாயிலாக மாணவா்களுக்குக் கல்வி கற்பிக்கப்பட்டாலும், அது அனைத்து மாணவா்களுக்கும் சென்று சோ்வதை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும்.

இணையதள வசதிகள் மாணவா்கள் பலருக்குக் கிடைக்காததால் அவா்கள் கல்வி கற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. அவா்களுக்கு மாற்று ஏற்பாடுகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். மாணவா்களது அறிவியல் ஆா்வத்தைத் தூண்டும் வகையிலான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.

மாணவா்களின் சிந்திக்கும் திறனை வளா்க்கும் வகையில் கல்வி கற்பித்தல் இருக்க வேண்டும்‘ என்றாா்.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags