1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

தமிழக தனியார் பள்ளிகளில் 40% மட்டுமே கல்விக்கட்டணம் வசூல் – கல்வித்துறை எச்சரிக்கை!

தமிழக தனியார் பள்ளிகளில் 40% மட்டுமே கல்விக்கட்டணம் வசூல் – கல்வித்துறை எச்சரிக்கை!


தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் 75 சதவிகித கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக 40 சதவிகித கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை கடுமையாக எச்சரித்து உள்ளது

பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு:



தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 2021-22 ஆம் ஆண்டுக்கான புதிய கல்வியாண்டு ஜூன் 14 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. இதனால் ஆன்லைன் வகுப்புகளுக்கு சில தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. எனவே பள்ளிக்கல்வித்துறை சார்பில் தனியார் பள்ளிகளில் 75 சதவிகித கல்வி கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

மொத்த கல்வி கட்டணத்தையும் முழுவதுமாக வசூலிக்காமல் இரண்டு தவணையாக வசூலிக்க வேண்டும் எனவும் முதல் தவணையாக 40 சதவிகித கல்வி கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால் பல தனியார் பள்ளிகளில் முழு கட்டணமும் செலுத்த வேண்டும் என பெற்றோர்களை வற்புறுத்துவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளது.


இந்நிலையில் இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கட்டண விவகாரம் குறித்து முக்கிய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன, இந்நிலையில் புதிய கல்வியாண்டிற்கான நேரடி வகுப்புகள் இன்னும் தொடங்கப்படவில்லை. ஆனால் பல தனியார் பள்ளிகள் நடப்பு கல்வியாண்டில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வருகின்றன.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags