தமிழக அரசின் நீட் ஆய்வுக்குழு செல்லும்: உயர்நீதிமன்றம்
தமிழகத்தில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு அமைத்த குழு செல்லும் என தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், நீட் ஆய்வுக் குழு அமைத்ததற்கு எதிராக பா.ஜ.,வின் கரு.நாகராஜன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது.
தமிழகத்தில் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்த ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 8 பேர் கொண்ட உயர்மட்ட குழு ஒன்றை தமிழக அரசு நியமித்திருந்தது. இதை எதிர்த்து தமிழக பா.ஜ., பொதுச்செயலர் கரு.நாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தமிழக அரசு நியமித்துள்ள இந்த ஆய்வுக்குழு, உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது,' எனக் கூறியிருந்தார். இந்த மனு இன்று (ஜூலை 13) விசாரணைக்கு வந்தது. அதில், ‛நீட் பாதிப்புகள் குறித்து குழு அமைத்த தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பாணை உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது அல்ல' தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.
![latest tamil news](https://img.dinamalar.com/data/gallery/gallerye_161328289_2801618.jpg)
மேலும், நீதிபதிகள் கூறுகையில், ‛பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மட்டுமே அரசு இந்த குழுவை அமைத்துள்ளது. பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தால் மட்டுமே அதனை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவிக்க முடியும். மாநில அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. மக்கள் கருத்து கேட்பு தொடர்பான கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது,' என கருத்து தெரிவித்தனர்.
எதிர்தரப்பு வாதத்தில், ‛மருத்துவ கல்வியின் தரத்தை உயர்த்த தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தின்படி, நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும்,' என்று வாதிடப்பட்டது.
![latest tamil news](https://img.dinamalar.com/data/gallery/gallerye_161351616_2801618.jpg)
இதனை குறுக்கிட்டு பேசிய நீதிபதிகள், ‛நீட் பாதிப்பு சம்பந்தமாக தமிழக அரசு மக்களிடம் கருத்து கேட்பது குறித்து கேள்வி எழுப்ப நீங்கள் யார்?' என கேள்வியெழுப்பியுள்ளது. மேலும், ‛நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய தமிழக அரசு குழு அமைத்தது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணாக இல்லை, மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராகவும் குழு இல்லை. அதேநேரத்தில், குழுவின் நியமனம் வீண் செலவு எனக் கூறமுடியாது.
நீட் தேர்வில் மாணவர்கள் பங்கேற்கும் வகையில் பள்ளி பாடத்திட்டங்களின் தரத்தை உயர்த்தலாம். மாணவர் சேர்க்கை நடைமுறையை தடுக்கும் வகையில் மாநில அரசு தனது அதிகார வரம்பை மீறவில்லை. குழுவுக்கு ஆதாரம் கிடைத்தால் அதன் மூலம் மாணவர் சேர்க்கை நடைமுறையை மாற்றியமைக்க கோரலாம்.' என்று குறிப்பிட்டுள்ள தலைமை நீதிபதி அமர்வு, கரு.நாகராஜன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.