அஞ்சல் துறையில் வாகன காப்பீடு
இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான காப்பீடு திட்டத்தை, அஞ்சல்துறை அறிமுகம் செய்துள்ளது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_7Yo2h2lqbrmsOoJNCABV4M2-5IiMJLfEnoGi2yVeBpusx0Ed436uVdwGPkAUimi0jLoKH5iY6JP9phup22z9K4FYvnR7WT-7ax8caSAo7_wLDyKaPFP7_R4vQA3ehf76p2MFLyyDFHw/w400-h235/postal-Dep.jpg)
இந்திய அஞ்சல் துறை, பொது மக்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு புதிய சேவைகளை அறிமுகம் செய்து, செயல்படுத்தி வருகிறது. அரசு சான்றிதழ்கள் வழங்கும் வகையில், அஞ்சலகங்களில் பொது சேவை மையம், ஓராண்டாக செயல்பட்டு வருகிறது.இதன் தொடர்ச்சியாக, வாகன காப்பீடு திட்டத்தை துவக்கி உள்ளது. இதற்காக, 'பஜாஜ் அலையன்ஸ், டாடா ஏ.ஐ.ஜி., - ஜெனரல் இன்சூரன்ஸ்' போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
வாகனங்களுக்கான காப்பீடு வழங்கும் சேவையை, நாடு முழுதும் துவக்கியுள்ள அஞ்சல் துறை, முதற்கட்டமாக இரண்டு, நான்கு சக்கர வாகனங்களுக்கு காப்பீடு வழங்குகிறது. அஞ்சல்துறை அதிகாரிகள் கூறியதாவது:அஞ்சல்துறை வாடிக்கையாளர்கள், அஞ்சலகங்களில் நேரடியாகவும், 'இந்திய போஸ்டல் பேமன்ட் பேங்க்' வாயிலாகவும், வாகனத்துக்கு காப்பீடு பெற்றுக் கொள்ளலாம். கூடுதல் ஆவணங்களின்றி, விரைவாக காப்பீடு வழங்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_7Yo2h2lqbrmsOoJNCABV4M2-5IiMJLfEnoGi2yVeBpusx0Ed436uVdwGPkAUimi0jLoKH5iY6JP9phup22z9K4FYvnR7WT-7ax8caSAo7_wLDyKaPFP7_R4vQA3ehf76p2MFLyyDFHw/w400-h235/postal-Dep.jpg)
இந்திய அஞ்சல் துறை, பொது மக்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு புதிய சேவைகளை அறிமுகம் செய்து, செயல்படுத்தி வருகிறது. அரசு சான்றிதழ்கள் வழங்கும் வகையில், அஞ்சலகங்களில் பொது சேவை மையம், ஓராண்டாக செயல்பட்டு வருகிறது.இதன் தொடர்ச்சியாக, வாகன காப்பீடு திட்டத்தை துவக்கி உள்ளது. இதற்காக, 'பஜாஜ் அலையன்ஸ், டாடா ஏ.ஐ.ஜி., - ஜெனரல் இன்சூரன்ஸ்' போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
வாகனங்களுக்கான காப்பீடு வழங்கும் சேவையை, நாடு முழுதும் துவக்கியுள்ள அஞ்சல் துறை, முதற்கட்டமாக இரண்டு, நான்கு சக்கர வாகனங்களுக்கு காப்பீடு வழங்குகிறது. அஞ்சல்துறை அதிகாரிகள் கூறியதாவது:அஞ்சல்துறை வாடிக்கையாளர்கள், அஞ்சலகங்களில் நேரடியாகவும், 'இந்திய போஸ்டல் பேமன்ட் பேங்க்' வாயிலாகவும், வாகனத்துக்கு காப்பீடு பெற்றுக் கொள்ளலாம். கூடுதல் ஆவணங்களின்றி, விரைவாக காப்பீடு வழங்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.