1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

பெட்ரோல் விலை 100 ஆனதில் பெட்ரோல் நிலையங்களுக்கு இப்படி ஒரு சங்கடமா?

பெட்ரோல் விலை 100 ஆனதில் பெட்ரோல் நிலையங்களுக்கு இப்படி ஒரு சங்கடமா?


பெட்ரோல் நிலையங்களுக்குச் செல்லும் வாகன ஓட்டிகள், வழக்கமாக 100 ரூபாய் கொடுத்து நூறுக்கு பெட்ரோல் போடுங்கள் என்று சொல்வது வழக்கம்.


 

ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டால் சில்லறை கொடுக்க வேண்டும் என்பதற்காக ரூ.100க்கு பெட்ரோல் போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் பெட்ரோல் நிலையங்களுக்குச் சென்று நூறு ரூபாய்க்கு பெட்ரோல் போடுங்கள் என்று சொன்னதை இந்த எண்ணெய் நிறுவனங்கள் தவறாகப் புரிந்து கொண்டு, ஒரு லிட்டர் பெட்ரோலை நூறு ரூபாய்க்கு போடும் வகையில் விலையை உயர்த்திவிட்டார்கள்.

இப்போது ஒரு லிட்டர் பெட்ரோல் நூறு ரூபாயைத் தாண்டி அடுத்து புதிய சாதனையைப் படைக்க முயன்று கொண்டிருக்கிறது. இதனால் ஏழைய எளிய மக்கள் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.

இதற்கிடையே, பெட்ரோல் விலை 100ஐத் தொட்டதில் பெட்ரோல் நிலையங்களுக்கும் ஒரு சங்கடம் ஏற்பட்டுள்ளது. இதுவரை நான்கு இலக்க எண்களைக் கொண்ட டிஜிட்டல் பேனர்களைப் பயன்படுத்தி வந்தவர்கள், தற்போது 100 ரூபாய் இத்தனை காசுகள் என்று ஐந்து இலக்கங்களில் விலையை மாற்ற முடியாமல், புதிய டிஜிட்டல் பலகைகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளன.

அதுவரை இருக்கும் பழைய 4 இலக்க டிஜிட்டல் பலகையில் 99.99 என்று பதிவிட்டு அதற்கு மேல் மாற்ற முடியாமல், புதிய டிஜிட்டல் பலகைக்காக காத்திருக்கிறார்கள். ஒரு சில பெட்ரோல் பங்குகள் கைகளால் எழுதும் பலகையைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. 

இதற்கு முன்பும், பெட்ரோல்  நிலையங்களுக்கு இப்படி ஒரு சங்கடம் ஏற்பட்டது. அது 1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம். அதாவது முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரு இலக்க எண்ணிலிருந்து 2 இலக்கத்துக்கு மாறிய போது.. அப்போது பெட்ரோல் விலை ரூ.2.39 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.12.23க்கு விற்பனையானது. அப்போதும் இதுபோன்ற இரட்டை இலக்க பலகைகளுக்கு மாறும் சூழல் பெட்ரோல் நிலையங்களுக்கு ஏற்பட்டது. 

தற்போதாவது கொஞ்சம் விழித்துக் கொண்டு வாங்கும் போதே ஆறு இலக்க எண்களைக் கொண்ட டிஜிட்டல் பலகைகளை வாங்கி விடுவது நல்லது என்று மனம் நொந்த வாடிக்கையாளர்கள் கூறி வருகிறார்கள்.
 

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags