1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

ஓபிசி பிரிவினருக்கு சாதிச்சான்றிதழ் வழங்கல் – புதிய ஆணை வெளியீடு!

ஓபிசி பிரிவினருக்கு சாதிச்சான்றிதழ் வழங்கல் – புதிய ஆணை வெளியீடு

தமிழகத்தில் ஓபிசி பிரிவினருக்கு சான்றிதழ் வழங்கும் போது ஊதியம் மற்றும் வேளாண் வருமானம் சான்றிதழை கணக்கில் எடுக்கக் கூடாது என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு உத்தரவிட்டு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.

ஓபிசி சான்றிதழ்:



நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பிரிப்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு 1993ஆம் ஆண்டு முதல் வேலைவாய்ப்பிலும், 2007ஆம் ஆண்டு முதல் ஐஐடி போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கும் வழங்கப்படுகிறது. இதற்காக பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்கள் அதற்கான ஜாதி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அது தான் ஓபிசி சான்றிதழ்.

தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என ஜாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஆனால் மத்திய அரசு பணியில் அல்லது கல்வி நிறுவனத்தில் சேர வளமான பிரிவினரை (Creamy layer) நீக்கி, ஓபிசி சான்றிதழ் எனப்படும் இதர பிற்படுத்துவோர் சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ் வட்டார அலுவலரால் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு புதிய ஆணை ஒன்றை வெளியிட்டுள்ளது

அதில் ஓபிசி சான்றிதழ் வழங்கும் போது வளமான பிரிவினரை நீக்குவதற்கான நெறிமுறையை அரசு வெளியிட்டுள்ளது. வருமான வரம்பை கணக்கிடும் போது ஊதியம் மற்றும் வேளாண்மை வருமானத்தை சேர்க்கக் கூடாது என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு உத்தரவிட்டு ஆணை வெளியிட்டுள்ளது.
பொதுவாக ஒபிசி சான்றிதழ் பெற 1993 ஆம் ஆண்டு அறிவிப்பின் படி பெற்றோர்களின் ஆண்டு வருமான வரம்பு ரூ.1 லட்சத்திலிருந்து படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 2017ஆம் ஆண்டு ரூ.8 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டு அவை தற்போது வரை நடைமுறையில் உள்ளது என தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது


Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags