தமிழகம் முழுவதும் அரசுப்போக்குவத்து கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகர, மாநகர பேருந்துகளில் கட்டணமில்லாமல் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது.
தமிழக முதல்-அமைச்சராக முக ஸ்டாலின் கடந்த 7-ம் தேதி பதவியேற்ற உடன் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில், நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற திட்டமும் உள்ளடக்கம் ஆகும். இதனை தொடர்ந்து, இந்த திட்டம் உடனடியாக செயல்பட்டிற்கு வந்தது.
இந்நிலையில், நகரம் மற்றும் மாநகர பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் செய்துவது தொடர்பாக பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை போக்குவரத்துத்துறை அரசு செயலாளர் சமயமூர்த்தி இன்று வெளியிட்டுள்ளார்.
அந்த நெறிமுறைகள் பின்வருமாறு:-
ஒரு பயணி என்று நின்றாலும் அவருக்காக பேருந்தை நிறுத்தி அந்த பயணியை ஏற்றிச்செல்ல வேண்டும்.
பெண் பயணிகளிடன் அன்புடன் நடந்துகொள்ள வேண்டும்
வயது முதிர்ந்த பெண்கள் இருக்கையில் அமர உதவி செய்ய வேண்டும்.
பெண்களிடம் எரிச்சலூட்டும் வகையிலோ, கோபமாகவோ, இழிவாகவோ, ஏளனமாகவோ பேசக்கூடாது.
பெண்கள் பேருந்தில் ஏறும்போதும், இறங்கும்போதும் கண்காணித்து பாதுகாப்பாக ஏறி,இறங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
குறிப்பிட்ட பேருந்து நிறுத்தத்தில் தான் பேருந்தை நிறுத்த வேண்டும்
பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் பல்வேறு வகையிலான தொடர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்
என தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.