தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பிவிட்டன. பல இடங்களில் படுக்கை மற்றும் ஆக்சிஜன் வசதிகள் இல்லாமல் நோயாளிகள் ஆம்புலன்ஸ் வேன்களில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்துவதற்கு தமிழக சுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையடுத்து சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து அரசு மேல்நிலை, உயர்நிலை பள்ளிகள் மற்றும் மாநகராட்சி மேல்நிலை, உயர்நிலை பள்ளிகள் அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் அதிக வகுப்பறைகள் மற்றும் இடவசதிகள் உள்ளதால், அவற்றை கொரோனா சிகிச்சை பயன்படுத்தும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 60 மாநகராட்சி பள்ளிகளில் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.