தேர்வு நடைபெற வேண்டிய வழிமுறைகள் :
* ஒவ்வொரு பாட ஆசிரியரும் அப்பாடத்தினை பயிலும் அனைத்து மாணவர்கள் மற்றும் தலைமையாசிரியர் உள்ளடங்கிய தனி Whats app Group உருவாக்கப்படுதல் வேண்டும் .
* மாணவர்களுக்கு தனியாகவும் , மாணவிகளுக்கு தனியாகவும் தனித்தனி Whats app Group உருவாக்கப்படுதல் வேண்டும் . தேர்வு நடைபெறும் அன்று காலை 9.50 மணிக்கு தேர்விற்கான வினாத்தாளினை தலைமை ஆசிரியரிடமிருந்து பெற்று மாணவர்களுக்கு Whats app மூலம் அனுப்புதல் வேண்டும் .
* மாணவர்களை மடிக்கணினிகள் / கைப்பேசி மூலம் வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து தனித்தாளில் விடைகளை எழுத அறிவுறுத்துதல் வேண்டும் . விடைத்தாளில் முதல் பக்கத்தில் மாணவர் பெயர் , பதிவு எண் ( அரசுத்தேர்வுத் துறையால் வழங்கப்பட்ட எண் ) , பாடம் மற்றும் நாள் ஆகிய விவரங்கள் மாணவரால் எழுதப்பட்டு இருக்க வேண்டும்.
* அனைத்து விடைகளையும் எழுதிய பின்பு இறுதியில் மாணவர் கையொப்பம் மற்றும் பெற்றோர் பாதுகாவலர் கையொப்பம் பெறுதல் வேண்டும் .
* எழுதப்பட்ட விடைத்தாட்களை Adobe Scan App மூலம் படம் பிடித்து , Pdf கோப்பாக Whats app மூலம் பாட ஆசிரியர்களுக்கு அனுப்புதல் வேண்டும் . மாணவர்கள் விடைத்தாட்களை image file ஆக அனுப்புவதை தவிர்க்க வேண்டும் .
* எழுதப்பட்ட விடைத்தாட்களை மாணவர்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
* பாட ஆசிரியர் Whats app மூலம் பெறப்பட்ட விடைத்தாட்களை Whats app- யிலேயே திருத்தம் செய்து உரிய மதிப்பெண்களை Whats app- யிலேயே Type செய்தல் வேண்டும்.
* Whats app - ல் திருத்தப்பட்ட விடைத்தாட்களை மாணவர்களுக்கு Whats app மூலம் அனுப்புதல் வேண்டும் . பயன்படுத்தப்படும் இந்த Whats app Group -ல் வினாத்தாட்கள் மற்றும் விடைத்தாட்கள் மட்டுமே இருத்தல் வேண்டும் . பயன்படுத்தப்படும் இந்த Whats app Group -ல் பள்ளியின் படம் , ஆசிரியர் படம் , தலைமையாசிரியரின் படம் , மாணவர் படம் , பெற்றோர் படம் போன்ற எந்த ஒரு படங்களும் கண்டிப்பாக இடம் பெறுதல் கூடாது
மேலும் , வேறு செய்திகள் , வீடியோக்கள் போன்ற பதிவுகள் கண்டிப்பாக இடம் பெறுதல் கூடாது. இதனை தலைமையாசிரியர் கண்காணித்தல் வேண்டும்.
* ஒவ்வொரு நாளும் தேர்வு முடிவுற்றவுடன் மாணவர் சம்பந்தப்பட்ட பாட ஆசிரியருக்கு விடைத்தாள் / நோட்டில் தேர்வு எழுதிய பக்கத்தினை படம் பிடித்து , Pdf ( Adobe Scan App மூலம் ) ஆக மாற்றம் செய்து Whats app மூலம் அனுப்பப்பட வேண்டும் . மாணவர்கள் தேர்வுகளை நோட்டிலோ மற்றும் தாளிலோ எழுதி அதனை பாட வாரியாக அடுக்கி மாணவர்களை பள்ளிக்கு நேரிடையாக வருகை புரிய அரசு அறிவிக்கும் நாளில் இந்நோட்டினை / விடைத்தாளினை ஆசிரியரிடம் கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.