1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? நாளை முக்கிய முடிவு

தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? நாளை முக்கிய முடிவு

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் 2-வது அலை கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. ஆஸ்பத்திரிகள் கொரோனா தொற்று நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. ஆக்சிஜன் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. கொரோனா தொற்றால் உயிர் இழப்புகளும் அதிகரித்து வருகிறது

இந்தநிலையில், கொரோனா தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக கடந்த ஏப்ரல் 20-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனினும், கொரோனா தொற்றின் வேகம் குறையாத காரணத்தால் கடந்த 10-ந் தேதி முதல் வருகிற 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அப்போது, மளிகை, காய்கறி, இறைச்சி, மீன் கடைகள் மதியம் 12 மணி வரை மட்டும் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டது.


பின்னர், ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்தப்பட்டு, கடந்த 15-ந் தேதி முதல் மளிகை,காய்கறி, இறைச்சி, மீன் கடைகள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.

இந்தநிலையில். தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 35,579 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 397 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், முதல்-அமைச்சர் ஸ்டாலின் நாளை மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

24ஆம் தேதியுடன் முழு ஊரடங்கு நிறைவடையும் நிலையில், முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது. தமிழகத்தில்

கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளின் கருத்து கேட்கிறார். தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்பது நாளை முக்கிய முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா பெருந்தொற்றின் பேரபாயத்தை உணர்ந்து பொதுமக்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் இருந்து மருத்துவ காரணங்களை தவிர்த்து பிற எந்த காரணங்களுக்காகவும் வெளியில் வராமல் இருந்தால் தான் கொரோனாவில் இருந்து தங்களை காத்துக் கொள்வதுடன், பிறருக்கும் கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்தி முழு ஊரடங்கு இல்லாத நிலையை உருவாக்க முடியும் என்பது நிதர்சனம்
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags