வானில் 'ரத்த நிலா'
''வானில் மிக அரிதான 'ரத்த நிலா' வரும் 26ம் தேதி தெரியும்'' என கோல்கட்டா பிர்லா கோளரங்க இயக்குனர் தேபி பிரசாத் துவாரி தெரிவித்துள்ளார்.
![latest tamil news](https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2770607.jpg)
இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம், வரும் 26ம் தேதி பவுர்ணமி தினத்தன்று நிகழ உள்ளது. இது குறித்து தேபி பிரசாத் துவாரி கூறியதாவது: சூரியன், பூமி, சந்திரன் ஆகிய கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் போது, பூமியின் நிழல் சந்திரனின் மீது விழுவதை சந்திர கிரகணம் என்கிறோம்.இதன்படி, வரும் 26ம் தேதி மிக அரிதான சந்திர கிரகணம், மாலை 3:15 முதல் 6:22 மணி வரை நிகழ உள்ளது. முழு சந்திர கிரணத்தை, கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பார்க்க முடியும். மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில், மாலை 6:15 முதல் 6:22 மணி வரை, சில நிமிடங்களுக்கு சந்திர கிரகணத்தை காணலாம். அடிவானத்தில் கீழ் நிலவு இருக்கும் என்பதால், சென்னை, மும்பை, டில்லி நகரங்களில் முழு கிரகணம் தெரியாது; பூமியின் நிழலில் ஒரு சிறு பகுதியை நிலவு கடக்கும் போது மட்டும், பகுதி கிரகணத்தை காணலாம்.
![latest tamil news](https://img.dinamalar.com/data/gallery/gallerye_020703426_2770607.jpg)
இந்த கிரகணத்திற்குப் பின், நிலவு, ரத்தச் சிவப்பு நிறத்தில் வழக்கத்தை விட பிரகாசமாக காட்சி அளிக்கும். இதை 'ரத்த நிலா' என்றழைக்கிறோம். பூமிக்கு மிக நெருக்கத்தில் நிலவு வரும்போது, வளி மண்டல ஒளிச் சிதறல் காரணமாக இது ஏற்படுகிறது. அடுத்த சந்திர கிரகணம், 2022, மே 16ல் நிகழ உள்ளது. இதை இந்தியாவில் பார்க்க முடியாது. ஆனால், அதே ஆண்டு, நவ., 8ல் நிகழும் சந்திர கிரணத்தை இந்தியாவில் காணலாம். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.