1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

தமிழகத்தில் செப்.1 முதல் பள்ளிகள் திறப்பு கண்காணிப்பு – சிறப்பு அதிகாரிகள் நியமனம்!

தமிழகத்தில் செப்.1 முதல் பள்ளிகள் திறப்பு கண்காணிப்பு – சிறப்பு அதிகாரிகள் நியமனம்!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய மாவட்ட வாரியாக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்.



 தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரி மாதம் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. ஆனால் அதன் பின்னர் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் தலைதூக்க தொடங்கியது. மேலும் பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
 
இதன் காரணமாக பள்ளிகள் முழுவதுமாக மூடப்பட்டன. இந்நிலையில் தற்போது வரை பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால் மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். அதனால் பள்ளிகளை திறக்க வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் கணிசமாக குறைந்த காரணத்தால் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகளை திறக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது.
 
இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ளது. அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளிகளை திறப்பதற்கான ஏற்பாடுகளை முன்கூட்டியே கண்காணிக்கவும், பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்யவும், மாவட்ட வாரியாக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். பள்ளிக்கல்வித்துறையை சேர்ந்த இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் இந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்குரிய உத்தரவு ஒரிரு தினங்களில் வெளியாக உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags