1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

தமிழகத்தில் 90.11 சதவீத ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டுள்ளனர்

'தமிழகத்தில், 90.11 சதவீத பள்ளி ஆசிரியர்களும், 89.32 சதவீத இதர பணியாளர்களும் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம், சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கியது. முகாமை, அமைச்சர்கள் சுப்பிரமணியன், மகேஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.பின், அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:தமிழகத்தில் 14.75 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. மத்திய அரசிடம் இருந்து, ஜூலையில் 17 லட்சம் தடுப்பூசிகளும், ஆகஸ்டில் 22 லட்சம் தடுப்பூசிகளும் பெறப்பட்டன.



தமிழகத்தில், நேற்று முன்தினம் மட்டும் 5.78 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன. சென்னை மாநகராட்சியில் நடத்தப்பட்ட 400 சிறப்பு முகாம்களில், ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 865 தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன.தற்போது பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால், பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் மொத்தமுள்ள ஆசிரியர்களில் 90.11 சதவீதம் பேரும்; இதர பணியாளர்களில் 89.32 சதவீதம் பேரும் தடுப்பூசி போட்டுள்ளனர். இந்த சிறப்பு தடுப்பூசி முகாம்களில் ஆசிரியர்கள், பணியாளர்கள், அவர்கள் குடும்பத்தினருக்கு தடுப்பூசி போடப்படும்.

தமிழகத்தில் தற்போது 3 லட்சத்து 57 ஆயிரத்து 179 கர்ப்பிணியருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதில், அரியலுார் மாவட்டத்தில் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு தடுப்பூசி போடப்படுகிறது. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 சதவீதம் மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கல்லுாரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கும் சிறப்பு முகாம்கள் வாயிலாக தடுப்பூசி போடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், பள்ளிக் கல்வித் துறை செயலர் காகர்லா உஷா, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags