வாரத்தில் 55 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் அவை எச்சரித்துள்ளது.
நீண்ட வேலை நேரங்களுடன் தொடர்புடைய உயிர் இழப்பு குறித்து சர்வதேச தொழிலாளர் நல அமைப்புடன் ஐக்கிய நாடுகள் அவை மேற்கொண்ட மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் சர்வதேச சுற்றுச்சூழல் இதழில் வெளியாகியுள்ளது. இந்த ஆய்வறிக்கையில், அதிக வேலை நேரங்களில் பணியாற்றும் நபர்களுக்கு உடல்நிலையில் பின்னடைவு ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது.
2000ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையிலான தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் அதிகப்படியான வேலை நேரத்தில் பணியாற்றிய 7,45,000 பேர் மாரடைப்பு மற்றும் இதய நோய்கள் காரணமாக மரணித்துள்ளது தெரியவந்துள்ளது.
"வாரத்தில் 55 மணிநேரம் அல்லது அதற்கும் மேற்பட்ட அளவில் வேலை செய்வது கடுமையான உடல்நலக் கேட்டிற்கு இட்டுச்செல்கிறது" என்று உலக சுகாதார நிறுவனத்தின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறையின் இயக்குநர் மரியா நீரா எச்சரித்துள்ளார்.
மேலும் குறிப்பிட்ட கால அளவைக் காட்டிலும் அதிகமாக வேலை செய்பவர்களுக்கு மற்றவர்களைக் காட்டிலும் மாரடைப்பு மற்றும் இதய நோய் பாதிப்பில் சிக்குவது அதிகரிப்பதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.