சென்னையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்திற்கு இன்று வருகை தரும் முதல்வர் ஸ்டாலின், தமிழகம் முழுதும் உள்ள மக்கள், மின்சாரம் தொடர்பான புகார் தெரிவிக்க வசதியாக, நவீன கணினி மையத்தை துவக்கி வைக்கிறார்.
சென்னை அண்ணா சாலையில், 10 மாடி கட்டடம் உடைய மின் வாரிய தலைமை அலுவலகம் உள்ளது. 1984ல் கட்டப்பட்ட அலுவலகத்தை, அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்., துவக்கி வைத்தார். இதற்காக அவர், மின் வாரிய அலுவலகத்திற்கு வந்தார்.அதன்பின், முதல்வராக இருந்த யாரும் மின் வாரிய அலுவலகத்திற்கு வந்ததில்லை.
சென்னை தலைமை செயலகத்திற்கு, மின் வாரிய உயரதிகாரிகளை அழைத்து, மின் வினியோகம் தொடர்பான விபரங்களை, முதல்வர்கள் கேட்டறிவர்.எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியாக, தற்போது, தமிழக முதல்வராக உள்ள ஸ்டாலின், இன்று காலை 10:30 மணிக்கு, மின் வாரிய தலைமை அலுவலக வளாகத்திற்கு வருகிறார். அங்குள்ள மின் தொடரமைப்பு கழக அலுவலகத்தின், முதல் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள, நவீன கணினி மையத்தை, பொது மக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்கிறார்.
ஒரே வாரத்தில் அமைக்கப்பட்டுள்ள அந்த மையத்தில், '1912' என்ற, கட்டணமில்லா தொலைபேசி எண்ணில், தமிழகம் முழுதும் வசிக்கும் மக்கள், மின் தடை உள்ளிட்ட மின்சாரம் தொடர்பான அனைத்து புகார்களையும் தெரிவிக்கலாம். அவை, உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டு, குறைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.