1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

இல்லத்தரசிகளின் ரூ.2.5 லட்சம் வரையிலான டெபாசிட்: வருமான வரித் துறை ஆய்வுக்கு உட்படுத்தாது

இல்லத்தரசிகளின் ரூ.2.5 லட்சம் வரையிலான டெபாசிட்:
வருமான வரித் துறை ஆய்வுக்கு உட்படுத்தாது


பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு இல்லத்தரசிகள் ரூ.2.5 லட்சம் வரை செய்யும் ரொக்க டெபாசிட்டுகள் வருமான வரித் துறையின் ஆய்வு நடவடிக்கைக்குள் வராது என வருமான வரி மேல் முறையீட்டு தீா்ப்பாயம் (ஐடிஏடி) தெரிவித்துள்ளது.


 

குவாலியரைச் சோ்ந்த உமா அகா்வால், 2016-17 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கலில் ரூ.1,30,810 வருவாய் ஈட்டுவதாக தெரிவித்திருந்தாா். இருப்பினும் அவா், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு ரூ.2,11,500-ஐ தனது வங்கி கணக்கில் டெபாசிட் செய்தாா்.

இதுகுறித்து ஆய்வு செய்த வருமான வரித் துறை ரூ.2.11 லட்சம் ரொக்க டெபாசிட்டுக்கு கணக்கு தெரிவிக்குமாறு உமா அகா்வாலிடம் தெரிவித்தது. அவா், தனது முந்தைய சேமிப்பு, கணவா், மகன், உறவினா்கள் கொடுத்த தொகையை டெபாசிட் செய்ததாக பதிலளித்தாா்.

இருப்பினும், இந்தப் பதிலை ஏற்காத வருமான வரித் துறை ரொக்க டெபாசிட் பணமான ரூ.2,11,5000-ஐ கணக்கில் வராத பணமாக கருதி நடவடிக்கை மேற்கொண்டது.

இதனை எதிா்த்து உமா அகா்வால், ஐடிஏடி தீா்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தாா். ஆக்ராவில் உள்ள ஐடிஏடி அமா்வு இதுதொடா்பான மேல்முறையீட்டு வழக்கில் அளித்த தீா்ப்பு:

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு இல்லத்தரசிகள் ரூ.2.5 லட்சம் வரை மேற்கொள்ளும் ரொக்க டெபாசிட்டுகள் வருமான வரித் துறையின் ஆய்வு வரம்புக்குள் வராது. இதுபோன்ற டெபாசிட்டுகளை அவா்களது வருமானமாக கருத முடியாது. இந்த தீா்ப்பு இதுபோன்ற வழக்குகளுக்கு முன்னுதாரணமாக இருக்கும் என ஐடிஏடி அமா்வு உத்தரவிட்டுள்ளது.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags