1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

தமிழ்நாடு மீன்வளத்துறையில் வேலை: 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

தமிழ்நாடு மீன்வளத்துறையில் வேலை: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!


தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை மீன்பிடித்துறைமுக திட்ட கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் காலியாக உள்ள இரண்டு ஊர்தி ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து பதிவு அஞ்சம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.01/2021

பணி: ஊர்தி ஓட்டுநர்

காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000

வயதுவரம்பு: 01.07.2021 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் 35-க்குள்ளும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர் 32-க்குள்ளும், இதர வகுப்பினர் 30க்குள்ளும் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் இலகுரக ஊர்தி ஓட்டுநர் உரிமம் பெற்று வாகனம் இயக்குவதில் மூன்று ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தானியங்கி மோட்டார் வாகன பழுது பணிமனையில் ஒரு ஆண்டிற்கு குறையாமல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

ஒட்டுநர் உரிமம் நாளது தேதிவரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.
இணையதளம் மூலம் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: செயற்பொறியாளர், மீன்பிடித்துறைமுக திட்ட கோட்டம், ஒருங்கிணைந்த கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலக வளாகம், நந்தனம், சென்னை- 600035.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 02.09.2021

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://bit.ly/3svT0xM என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags