1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

ரூ.200 கோடி மதிப்பீட்டில் மாணவர்களுக்குக் கற்பித்தல் வாசிப்பு இயக்கம்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

ரூ.200 கோடி மதிப்பீட்டில் மாணவர்களுக்குக் கற்பித்தல் வாசிப்பு இயக்கம்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாணவர்களுக்குக் கற்பித்தல் வாசிப்பு இயக்கம் என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.



நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் மீதான பதிலுரையை இன்று (ஆக. 19) சட்டப்பேரவையில் ஆற்றினார்.    அப்போது அவர் பேசியதாவது:

"கோவிட் பெருந்தொற்றால் ஏற்பட்டிருக்கும் கற்றல் இழப்புகள் மற்றும் உளவியல் சிக்கல்கள் ஆகியவற்றைச் சரிசெய்திட மாபெரும் கற்பித்தல் வாசிப்பு இயக்கம் தமிழகமெங்கும் செயல்படுத்தப்படும். இதன் முழு விவரங்களைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பார்.

இதனுடைய அம்சம் என்னவென்றால், ஒன்றரை வருடம் இங்கே வகுப்புகள் நடக்காத சூழ்நிலையில், திடீரென்று மாணவர்களைப் பள்ளிகளுக்கு திருப்பி அழைத்து உடனடியாக அவர்களை வகுப்புகளில் சேர்த்தால், பலர் வரமாட்டார்கள். பலர் வந்தாலும் கற்றுக்கொள்ள முடியாது. பல ஆசிரியர்களுக்குச் சில காயங்கள் இருக்கலாம்.

ஏற்கெனவே வெளிப்படையாக நிறைய தகவல்கள் வருகின்றன. குழந்தைத் திருமணங்கள் அதிகரித்துள்ளன. குழந்தைத் தொழிலாளர்களும் அதிகரித்துக்கொண்டே வருகின்றனர். நிரந்தரமாக சில பேர் படிப்பை நிறுத்திவிட்டார்கள் என்ற சூழ்நிலை உருவாகியிருப்பதாகத் தகவல் வந்திருக்கிறது.

அதையெல்லாம் திருத்தும் வகையில் ஒரு மிகச் சிறந்த திட்டத்தை வெளியிடுகிறேன். தற்போது இந்த நிதியாண்டின் முதல் ஒதுக்கீடாக ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, அனைத்துப் பள்ளிக் கல்வி மாணவர்களுக்கும் ஊக்கம் கொடுக்கும் வகையில் பள்ளி நேரத்துக்குப் பிறகு மாலை நேரத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். இதற்காக கற்பித்தல் வாசிப்பு இயக்கம் என்ற ஒரு திட்டம் செயல்படுத்தப்படும்".

இவ்வாறு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags