1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

வீதிகள் தோறும் பள்ளிகள்; மாணவரை தேடி செல்லும் ஆசிரியர்கள்!

வீதிகள் தோறும் பள்ளிகள் செய்வோம் மாணவரை தேடி செல்லும் ஆசிரியர்கள்


கரூர் மாவட்டம், மணவாசி அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களை தேடி சென்று வீதிகளை வகுப்பறையாக மாற்றி, பாடம் கற்று தருகின்றனர்.

கொரோனா பாதிப்பு காரணமாக, ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளன. எனினும், தனியார் பள்ளிகளில், 'ஆன்லைன்' வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசு பள்ளிகளில், ஆன்லைன் வகுப்பு நடத்தும் வசதிகள் இல்லாததால், மாணவர்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

இந்நிலையில், கரூர் மாவட்டம், மணவாசி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியை தேன்மொழி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களின் வீடு தேடி சென்று, பாடம் நடத்தி வருகின்றனர்.



தலைமை ஆசிரியை தேன்மொழி கூறியதாவது: எங்கள் பள்ளியில் எல்.கே.ஜி., முதல், எட்டாம் வகுப்பு வரை, 179 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். கல்வி தொலைக்காட்சி, 'வாட்ஸ் ஆப்' வாயிலாக பாடங்கள் கற்று தரப்பட்டன.ஆயினும், மாணவ - மாணவியரின் கற்றல் திறனில் திருப்தி இல்லை. மற்ற ஆசிரியர்களிடம் ஆலோசனை நடத்தினேன். இதன்படி, விடுமுறை தவிர மற்ற நாட்களில் ஒவ்வொரு பகுதிக்கும், நான் உட்பட ஐந்து ஆசிரியர்கள் சென்று, மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி வருகிறோம்.

பள்ளிகளில் பாடம் எடுப்பதை போலவே, மாணவர்கள் அனைவரையும், அங்குள்ள கோவில், பொது இடங்களில் வரவழைத்து சமூக இடைவெளியை பின்பற்றி, முக கவசம் அணிந்து, கைகளை சுத்தமாக கழுவி பாடம் நடத்தி வருகிறோம்.ஆக., 2 முதல் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 150 மாணவ - மாணவியர் கலந்து கொள்கின்றனர். வரும், 9ல் இருந்து எல்.கே.ஜி., - யூ.கே.ஜி.,க்கும் பாடம் நடத்த இருக்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

இதுபோல, புனவாசிப்பட்டி அரசு துவக்கப் பள்ளி உதவி ஆசிரியர் கோபிநாத், வீடு தேடி சென்று பாடங்களை நடத்தி வருகிறார்.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags