1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

செவ்வாழையில்- இவ்வளவு நன்மைகளா

செவ்வாழையில்" இவ்வளவு நன்மைகளா
இவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சே ???
1... செவ்வாழை வாழைப்பழங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த பழம் செவ்வாழை மற்ற பழங்களைவிட உயிர்ச் சத்து சுண்ணாம்புச் சத்து இரும்புச் சத்து நார்ச் சத்து மற்றும் பீட்டா கரோட்டின் என உடல் நலத்திற்கு தேவையான எண்ணற்ற சத்துக்களை கொண்ட பழம் செவ்வாழை…

 2... மாலைக்கண் நோய் முதல் மலட்டுத்தன்மை வரை அனைத்துப் பிரச்சினைகளையும் குணமாக்க கூடிய பழம்

 தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வர நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன குணமாகக் கூடிய நோய்கள் என்ன அப்படிங்கிறது பற்றிதான்பார்க்க போறோம். 

3... இரத்த அளவை அதிகரிக்க கூடியது செவ்வாழை, செவ்வாழை ஹீமோகுளோபினை அதிகரிக்க தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின்கள் நிறைந்து உள்ளது ரத்த சோகையினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் இரண்டு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வர ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் அதிகரித்து புதிய ரத்தம் உருவாகும்…

 4... நெஞ்செரிச்சலை குணமாக்க கூடிய தன்மை கொண்ட பழம் செவ்வாழை எனவே தினமும் இதனை சாப்பிட்டு வர நெஞ்செரிச்சலலிருந்து நிவாரணம் கிடைக்கும்.  அதிலும் ஒரு மாதம் தொடர்ந்து செவ்வாழை சாப்பிட்டு வர நெஞ்செரிச்சல் பிரச்சனை முற்றிலும் குணமாகும்.

5...  நரம்புத் தளர்ச்சி குணமாக கூடியது செவ்வாழை
 நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும் ஆண்மை குறைபாடு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு .  பாதிக்கப்பட்டவர்கள் தினமும் இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வர நரம்புகள் பலம் பெறும் அதோடு ஆண் தன்மை சீரடையும் செவ்வாழையை குழந்தை பேறு தரும் பழம் எனவும் அழைக்கிறார்கள்…

 6... திருமணமான தம்பதியினர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ ஜோசியரையோ நாடுவர் அவர்களுக்கு செவ்வாழை ஒரு அருமையான மருந்து குழந்தை இல்லாத தம்பதிகள் தினசரி ஆளுக்கு ஒரு செவ்வாழை பழம் சாப்பிட்டுவிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும்,  தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வர நிச்சயம் கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள் …

7... கண்டிப்பாக குழந்தை பேறுக்காக காத்திருப்பவர்கள் செவ்வாழை சாப்பிட்டு பாருங்க.  இது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் மாலைக்கண் நோயை குணமாக்க கூடியது.  கண் பார்வை பாதிக்கப் பட்டவர்களுக்கு செவ்வாழை ஒரு சிறந்த மருந்து கண் பார்வை குறைபாட்டை போக்க தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வர பார்வை தெளிவடையும் மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்,  இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் முற்றிலும் குணமாகும் …

8... சருமம் சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல நிவாரணம் கொடுக்க கூடியது செவ்வாழை

 சொரி சிரங்கு தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த ஒரு நிவாரணி சிரங்கு மற்றும் தோல் வெடிப்புக்கு மருந்து போட்டாலும் செவ்வாழை பழத்தை தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வர நல்ல ஒரு மாற்றம் தெரியும்.   எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றிமையாதது செவ்வாழை செவ்வாழையில் கால்சியம் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது.   வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட்டு வரலாம் எலும்புகளின் வளர்ச்சிக்கும் எலும்புகளின் உறுதிக்கும் மிகவும் இன்றிமையாதது…

9  தினமும் செவ்வாழை சாப்பிட்டு வர எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும் குறிப்பாக கணினியில் அதிக நேரம் வேலை செய்றவங்க முதுகு வலியால் அவதிப்படுவார்கள் அப்படிப்பட்டவர்கள் தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வர அவளின் முதுகு வலி குணமாகும் …

10... மலச்சிக்கலைப் போக்கக் கூடியது செவ்வாழை .. நார்ச்சத்து அதிகம் கொண்ட பழம் செவ்வாழை இதில் 4 கிராம் அளவு நார்ச்சத்து உள்ளது இது செரிமான மண்டலத்தில் உள்ள பிரச்சனைகளை நீக்கி மலச்சிக்கலை தடுக்கும் …

11... பைல்ஸ் பிரச்சனையால் அவதி படுபவர்களுக்கு நல்ல நிவாரணம் கொடுக்க கூடியது செவ்வாழை அதிகப்படியான உடல் சூடு நாள்பட்ட மலச்சிக்கல் மற்றும் முறையற்ற குடலிறக்கம் போன்ற பிரச்சினை ஏற்பட்டது இந்த பைல்ஸ் பிரச்சினையை கோடை காலத்தில் அதிகம் அவதிப்படுவார்கள் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வர பைல்ஸ் நோய் உண்டாகக் கூடிய வேதனை குறையும்.  அதுமட்டுமில்லாமல் பைல்ஸ் விரைவில் குணமாகும்
அல்சரை குணமாக்க கூடியது.  அல்சர் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வர வயிற்றிலுள்ள அசிடிட்டி குறைந்து வயிற்று எரிச்சல் ஏற்படுவது தடுக்கப்படும் நல்ல பாதுகாப்பைக் கொடுக்கும்.   தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags