1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

சிறுநீரகம் சார்ந்த குறைபாடுகளையும் சீர் செய்ய உதவும் அருமருந்து

சிறுநீரகம் சார்ந்த குறைபாடுகளையும் சீர் செய்ய உதவும் அருமருந்து

இளைத்த உடலைப் பெருக்கவும் மற்றும் சிறுநீரக குறைபாடுகளைச் சீர் செய்யவும் இந்த சூரணம் பயன்படுகிறது. பயன்படுத்திப் பலனடையுங்கள். 






தேவையான பொருள்கள்

கடுக்காய் தோல்           -     10

அதிமதுரம்                      -    100 கிராம்

வெள்ளரி விதை            -    100 கிராம்

செய்முறை

முதலில்  கடுக்காயைக் கொட்டையை நீக்கி தோல் எடுத்துக் கொள்ளவும். வெள்ளரி விதையை லேசாக வறுத்துக் கொள்ளவும். அதிமதுரத்தையும் சுத்தப்படுத்திக் கொள்ளவும். பின்பு  மூன்று பொருட்களையும் தனித்தனியாக அரைத்து பின்பு ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும்.

கடுக்காய் தோல் கிடைக்கவில்லையென்றால் கடுக்காய் பொடி 100 கிராம் வாங்கி மேற்கூறிய பொருட்களோடு கலந்து கொள்ளவும். 

பயன்கள்

இந்த சூரணம் இளைத்த உடலைப் பெருக்கவும் மற்றும் சிறுநீரகம் சார்ந்த குறைபாடுகளையும் சீர் செய்ய உதவும் அருமருந்தாகும். உடலைப் பெருக்க நினைப்பவர்கள் மேற்கூறிய சூரணத்தைத் தயார் செய்து  காலை மற்றும் மாலை என இருவேளையும் தலா ஐந்து கிராம் அளவு எடுத்து சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வரவும். 48 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரவும். பின்பு தேவையறிந்து எடுக்கலாம்.

நீங்கள் எடுத்துக் கொண்டியிருக்கிற மருந்துகளோடு இதனை  எடுத்துக் கொள்ளலாம்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாகச் சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags