தெலங்கானா மாநிலத்தில் பொதுமுடக்கத்தை முழுமையாக தளர்த்தியுள்ள நிலையில், ஜூலை 1 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.
கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவியதை அடுத்து தெலங்கானா மாநிலத்தில் கடந்த மாதம் முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், பொதுமுடக்கமானது நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் தளர்வுகள் குறித்து ஆலோசிக்க மாநில அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடியது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தொற்றின் பரவல் படிப்படியாக குறைந்து கட்டுக்குள் வந்த நிலையில், நாளை காலை 6 மணிமுதல் பொதுமுடக்க கட்டுப்பாடுகளை முழுவதுமாக தளர்த்திக் கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவியதை அடுத்து தெலங்கானா மாநிலத்தில் கடந்த மாதம் முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.
மேலும், ஜுலை 1ஆம் தேதி முதல் அனைத்து வகையான கல்வி நிறுவனங்களிலும், அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்பு தொடங்கப்படும் என முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கரோனா மூன்றாம் அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என பல தரப்பில் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், நேரடி வகுப்புகளை தெலங்கானா அரசு தொடங்குவது பெற்றோர் மற்றும் நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.