தமிழகத்தில் 11-ம் வகுப்புக்கு நுழைவுத்தேர்வு ரத்து
11-ம் வகுப்புக்கு நுழைவுத்தேர்வு நடத்துவது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியான அறிவிப்புக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், நுழைவுத்தேர்வினை ரத்து செய்வதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கோவிட் பரவலால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இதுவரை மதிப்பெண் கணக்கிட்டு வழங்கப்படாத நிலையில், 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
அதில், ‛அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையை உடனடியாக துவங்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவில் அனுமதிக்கப்பட்ட இடங்களை விட, கூடுதலான மாணவர்கள் விண்ணப்பித்தால், 15 சதவீதம் வரை மட்டும் அனுமதிக்க வேண்டும்.

மிக அதிகமான அளவில் விண்ணப்பங்கள் வந்தால் பள்ளி அளவில் நுழைவுத்தேர்வு நடத்தி மாணவர்களை அனுமதிக்க வேண்டும்,' என கூறப்பட்டிருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 11-ம் வகுப்புக்கு நுழைவு தேர்வு என்ற அறிவிப்பை திரும்பப் பெறுமாறு பலரும் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, 11-ம் வகுப்புக்கு நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.