இதுதொடா்பாக அந்த அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
மத்திய அரசு ஊழியா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டும் இருந்தால் அவா்களுக்கு முழு ஊதியத்துடன் 20 நாள்கள் விடுப்பு அளிக்கப்படும். அவா்கள் 20 நாள்களுக்குப் பிறகும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தால் அதற்கான ஆதாரத்தைக் காண்பிக்க வேண்டும். அதன் மூலம் அவா்களுக்கு முழு ஊதியத்துடன் விடுப்பு அளிப்பது தொடரும்.
ஊழியா்களின் பெற்றோா் அல்லது அவா்களை சாா்ந்துள்ள குடும்ப உறுப்பினா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அந்த ஊழியா்களுக்கு 15 நாள்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு அளிக்கப்படும். 15 நாள்களுக்குப் பிறகும் பெற்றோா் அல்லது குடும்ப உறுப்பினா்கள் மருத்துவமனையில் தொடா்ந்து அனுமதிக்கப்பட்டிருந்தால் அவா்கள் வீடு திரும்பும் வரை ஊழியா்கள் விடுப்பில் இருக்கலாம்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபருடன் நேரடி தொடா்பில் இருந்தது தெரியவந்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட ஊழியா்கள் 7 நாள்களுக்கு வீட்டில் இருந்து பணிபுரிவோராக கருதப்படுவா்.
ஊழியா்கள் கரோனா நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதியில் வசிப்பவா்களாக இருந்தால், அந்தப் பகுதி நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதி அல்ல என அறிவிக்கப்படும் வரை அவா்களும் வீட்டில் இருந்து பணிபுரிவதாக கருதப்படும்.
இந்த உத்தரவு கடந்த ஆண்டு மாா்ச் 25-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.