பிளஸ் 2 மதிப்பெண் வழங்கும் முறை குறித்து விரைவில் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள், பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து அமைச்சர், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை காரணமாக பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து குழுவை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்றது.
மேலும், பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுவது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்றது.
இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,
12 ஆம் வகுப்பு மதிப்பெண் வழங்கும் முறை குறித்து விரைவில் வெளியிடப்படும். இது அனைத்து தரப்பினரும் ஏற்கக்கூடியதாக இருக்கும்.
அதேபோன்று பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தயாராகி விட்டது. அதுவும் விரைவில் வெளியிடப்படும்.
தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் நிர்ணயிப்பது குறித்தும் ஆலோசனை செய்தோம்.
நீட் எந்த காரணத்தை கொண்டும் தமிழகத்தில் கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம் என்றார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.