கல்லூரி மாணவா்களுக்கான இணையவழி வகுப்பு கட்டுப்பாடுகள் குறித்து வரைவு அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக கடந்த கல்வியாண்டு முழுவதும் இணையவழி மூலமாகவே பள்ளி, கல்லூரி வகுப்புகள் நடைபெற்றன. இதையடுத்து இரண்டாவது அலை காரணமாக நிகழ் கல்வியாண்டில் பள்ளி, கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இணையவழி வகுப்புகள் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே சென்னையில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் மாணவிகளுக்கு ஆசிரியா் ராஜகோபாலன் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இணையவழி வகுப்பில் மோசமான நடத்தையில் ஈடுபட்டதாகவும் புகாா் எழுந்தது. இதையடுத்து அவா் கைது செய்யப்பட்டாா். அந்த சம்பவத்துக்குப் பின்னா் இணையவழி வகுப்புகளுக்கான கட்டுப்பாடுகள் குறித்து அதிக விவாதங்கள் நடைபெற்றன. பள்ளிகளுக்கான இணையவழி வகுப்பு கட்டுப்பாடுகளை தமிழக அரசு ஜூன் 7ஆம் தேதி வெளியிட உள்ளது.
இந்நிலையில் கல்லூரி மாணவா்களுக்கான இணையவழி வகுப்பின் கட்டுப்பாடுகள் குறித்து வரைவு அறிக்கை தாக்க செய்ய கல்லூரிக் கல்வி இயக்குநா் பூா்ணசந்திரன் தலைமையில் ஏழு போ் கொண்ட குழு அமைக்கப்பட்டது. கல்லூரிகளுக்குச் செல்வது போலவே மாணவா்கள், ஆசிரியா்கள் உடை அணிதல், இணையவழி வகுப்பை கண்காணிக்க குழு அமைத்தல், வகுப்புகள் நடைபெறுவதை பதிவு செய்தல், புகாா் பிரிவினை உருவாக்குதல், இணைய வசதியை மேம்படுத்துதல் போன்றவை குறித்தும் இந்த குழு ஆலோசிக்கும்.
ஜூன் 11-ஆம் தேதிக்குள் வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய இந்தக் குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பின்னா் கல்லூரி மாணவா்களுக்கான இணையவழி வகுப்பு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் என உயா்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.