கல்பாக்கம் அணுசக்தி துறை பணிகள் விண்ணப்ப நாள் நீடிப்பு
அணுசக்தி துறை பணிகளுக்கு, இணைய விண்ணப்ப நாள் நீட்டிக்கப் பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் அணுசக்தி துறையின் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் இயங்குகிறது.
இம்மைய அறிவியலாளர், தொழில்நுட்பவியலாளர், கிரேன் ஆப்பரேட்டர், ஸ்டெனோகிராபர் உள்ளிட்ட பணியாளர்கள், உதவித்தொகை பயிற்சியாளர்கள் என, 239 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.
இம்மையத்தின், www.igcar.gov.in என்ற இணையதளத்தில், விண்ணப்பம் பதிவிறக்கி, மே 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும், பின், 3ம் தேதி வரை நீட்டித்தும் அறிவிக்கப்பட்டது.
கொரோனா தொற்று தடுப்பு ஊரடங்கு சூழலில், குறித்த நாளிற்குள் விண்ணப்பிக்க சிரமம் ஏற்பட்டதால், விண்ணப்ப இறுதிநாளை நீட்டிக்க, நிர்வாகம் முடிவு செய்தது
கொரோனா தொற்று தடுப்பு ஊரடங்கு சூழலில், குறித்த நாளிற்குள் விண்ணப்பிக்க சிரமம் ஏற்பட்டதால், விண்ணப்ப இறுதிநாளை நீட்டிக்க, நிர்வாகம் முடிவு செய்தது
இதையடுத்து, இம்மாதம், 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, நிர்வாகம் அறிவித்துள்ளது.இதற்கிடையே, பணி நியமனத்தில், இட ஒதுக்கீடு, வெளிப்படைத்தன்மையை பின்பற்ற, திருப்போரூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாலாஜி, அந்நிர்வாகத்திடம் வலியுறுத்தி, இ - மெயில் கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.