இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை வெகுவாக குறைந்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட தகவலில் நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 636 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 89 லட்சத்து 09 ஆயிரத்து 975 ஆக உயர்வடைந்து உள்ளது
கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணிநேரத்தில் 2,427 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,49,186 ஆக உயர்ந்து உள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 74 ஆயிரத்து 399 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 71 லட்சத்து 59 ஆயிரத்து 180 ஆக உயர்வடைந்து உள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 14,01,609 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 23 கோடியே 27 லட்சத்து 86 ஆயிரத்து 482 ஆக உள்ளது என்று தெரிவித்து உள்ளது.
கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 36 கோடியே 63 லட்சத்து 34 ஆயிரத்து 111 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்றும், அதில் நேற்று ஒருநாளில் மட்டும் 15,87,589 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. பேருந்து, மெட்ரோ ரெயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை மெல்ல திரும்பி வருகிறது.
இந்நிலையில், நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் சூழ்நிலையில், பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார். இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார்.
மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதல் மற்றும் கொரோனா விதிகளை பின்பற்றுதல் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.