கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் வரும் 14 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் அலுவலகங்களுக்கு பணிக்கு வருவதற்கு விலக்கு அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது
இது குறித்து தமிழக மாற்றுத்திறனாளிகள் துறை வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
“கொரோனா பரவலையொட்டி தமிழகத்தில் முழு ஊரடங்கு 14-ந் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களுக்கு அலுவலகத்திற்கு வருவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே அவர்கள் அலுவலகத்திற்கு வருவதில் இருந்து 6-ந் தேதி வரை விலக்கு அளித்து அரசு ஆணையிட்டு இருந்தது. தற்போது ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 13-ந் தேதி வரை அவர்களுக்கு அரசு அலுவலகங்களுக்கு வருவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிடப்படுகிறது.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.