பெற்றோர், ஆசிரியர் கருத்துகளைக் கேட்டு பள்ளிகள் திறப்பு குறித்து 11-ம் தேதி முடிவு: அமைச்சர்
பெற்றோர், ஆசிரியர்களின் கருத்துக்களின் அடிப்படையில் வரும் 11-ம் தேதி பள்ளிகள் திறப்பு குறித்த முடிவு அறிவிக்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் பவானியில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பள்ளிகள் திறப்பு குறித்து வரும் 9-ம் தேதி ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்படும். அவர்கள் தெரிவிக்கும் கருத்துகள், ஆலோசனைகளின் அடிப்படையில், பள்ளிகள் திறப்பு குறித்து வரும் 11-ம் தேதி முடிவு அறிவிக்கப்படும்.
கும்பகோணம் பள்ளி தீ விபத்துக்குப் பிறகு, தனியார் பள்ளிகள் கட்டிட அனுமதி பெறவேண்டும் என்ற விதிமுறை உருவாக்கப்பட்டது. கட்டிட அனுமதி பெறாதவர்களுக்கு ஓராண்டுதான் அங்கீகாரம் வழங்க வேண்டுமென்றாலும், முதல்வரின் ஒப்புதலுடன் இரண்டாண்டுகள் அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் வெளிப்படைத்தன்மையுடன் இதுவரை 2,512 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.