வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்காகப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட புதிய வலைதளத்தில் தொடா்ந்து தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறையை எளிமைப்படுத்துவதற்காக புதிய வலைதளத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தை இன்ஃபோசிஸ் நிறுவனம் கடந்த 2019-ஆம் ஆண்டில் பெற்றது. அந்நிறுவனம் உருவாக்கிய வலைதளத்தை மத்திய அரசு கடந்த 7-ஆம் தேதி பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தது.
src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js">வழக்கமாக வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்தால், அதைப் பரிசீலனை செய்து தொகையை வழங்குவதற்கு குறைந்தபட்சம் 63 நாள்கள் ஆகும். அந்தக் காலத்தை ஒரு நாளாகக் குறைக்கும் வகையில் புதிய வலைதளம் உருவாக்கப்பட்டிருந்தது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோருக்கு இந்த வலைதளம் பெரும் பலனளிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஆனால், அந்த வலைதளத்தில் பல்வேறு தொழில்நுட்பக் கோளாறுகள் காணப்படுவதாக 24 மணி நேரத்துக்குள் பலா் சுட்டுரை வாயிலாகக் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தனா்.
அப்புகாா்கள் குறித்து ஆராய்ந்து, தொழில்நுட்பக் கோளாறுகளை விரைவில் சரிசெய்யுமாறு இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வலியுறுத்தியிருந்தாா். ஆனால், புதிய வலைதளத்தில் மேலும் பல்வேறு தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டு வருவதாக பட்டயக் கணக்கா்கள் பலா் குற்றஞ்சாட்டியுள்ளனா்.
வலைதளத்துக்குள் கடவுச்சொல்லைப் பதிவிட்டு உள்செல்வதற்கு நீண்ட நேரம் ஆகிறது என்றும், வலைதளத்தின் பல்வேறு வசதிகள் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை என்றும் அவா்கள் தெரிவிக்கின்றனா். முந்தைய காலங்களில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்குகளின் விவரங்களைப் பெற முடியவில்லை என்றும் அவா்கள் குற்றஞ்சாட்டினா்.
src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js">வலைதளத்தின் செயல்பாட்டு வேகம் மிகவும் குறைவாக உள்ளதாகவும், அதனால் கால விரயம் ஏற்படுவதாகவும் பலா் குற்றஞ்சாட்டுகின்றனா்.
புதிய வலைதளம் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டு ஒரு வாரம் ஆனபிறகும் தொழில்நுட்பக் கோளாறுகள் சரிசெய்யப்படாததற்கு பலா் அதிருப்தி தெரிவித்துள்ளனா். அக்கோளாறுகளை உடனடியாக சரிசெய்ய வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.