12-ம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்கப்படும்?
சி.பி.எஸ்.இ பொதுத் தேர்வுகளை ரத்து செய்துள்ள மத்திய அரசு மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து ஆராய ஒரு வல்லுநர் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.
இதேபோன்று தமிழக அரசும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்துள்ள நிலையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து கல்வியாளர்கள் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கொண்ட குழு மதிப்பெண் வழங்கும் முறையை அரசுக்கு பரிந்துரைக்கும் என்று அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று குறைந்த நிலையில் கடந்த ஜனவரி 17-ம் தேதி 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு ஏப்ரல் 16-ம் தேதி வரை 90 நாட்கள் வகுப்புகள் நடைபெற்றுள்ளது. இதில் 5 பாடங்களுக்கும் சேர்த்து ஒரு அலகுத் தேர்வு மற்றும் ஒரு முழு திருப்புதல் அரசுப்பள்ளிகளில் நடத்தப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகள் ஓராண்டிற்கு மேலாக ஆன்-லைன் வழியில் அவர்களுக்கான வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் தங்கள் மாணவர்களுக்கு பாடவாரியாக தொடர்ச்சியாக தேர்வுகளை நடத்தி மதிப்பெண் வழங்கியிருக்கின்றனர். அதேபோன்று இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகளும் முழுவதும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அரசு அமைத்துள்ள குழு பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி மதிப்பெண் வழங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தனியார் பள்ளிகள் ஓராண்டிற்கு மேலாக ஆன்-லைன் வழியில் அவர்களுக்கான வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் தங்கள் மாணவர்களுக்கு பாடவாரியாக தொடர்ச்சியாக தேர்வுகளை நடத்தி மதிப்பெண் வழங்கியிருக்கின்றனர். அதேபோன்று இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகளும் முழுவதும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அரசு அமைத்துள்ள குழு பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி மதிப்பெண் வழங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதன்படி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் மற்றும் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை கணக்கீடு செய்து 12-ம் வகுப்பு மதிப்பெண் வழங்க வாய்ப்புள்ளது.
10 மற்றும் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்களை கொண்டு இந்த ஆண்டு மட்டும் சதவிகிதம் அல்லது கிரேடு முறையில் வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகின்றது.
இந்த ஆண்டு மாணவர்களுக்கு நடைபெற்ற திருப்புதல் தேர்வு மற்றும் அலகுத் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண் கணக்கிட்டு வழங்கப்படவும் வாய்ப்பு உள்ளது
10 மற்றும் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்களை கொண்டு இந்த ஆண்டு மட்டும் சதவிகிதம் அல்லது கிரேடு முறையில் வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகின்றது.
இந்த ஆண்டு மாணவர்களுக்கு நடைபெற்ற திருப்புதல் தேர்வு மற்றும் அலகுத் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண் கணக்கிட்டு வழங்கப்படவும் வாய்ப்பு உள்ளது
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.