கரோனா பரவலால் 2019- 2020 கல்வி ஆண்டில் பெயர் விடுபட்டு போன சின்னமனூர் மாணவரை 2020- 21 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த சுரேஷ்குமார், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
என் மகன் ஸ்ரீதர். சின்னமனூரில் உள்ள தனியார் பள்ளியில் 2019-20ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு படித்தார். கரோனா ஊரடங்கால் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு நடத்தாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். ஆனால் என் மகன் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கவில்லை.
அடுத்த கல்வியாண்டில் என் மகன் பெயரை சேர்ப்பதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. 2020- 2021 கல்வியாண்டிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு நடத்தாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.
இப்போதும் என் மகன் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படவில்லை. என் மகனை பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:
ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களிடம் புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. 2020-21ம் கல்வியாண்டு முழுமையாக நேரடி வகுப்புகள் இல்லாமல் ஆன்லைன் முறையிலேயே நடந்துள்ளது. இதனால் 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் தேர்வு நடத்தாமலேயே தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. எனவே, மனுதாரர் மகனை 2020-21ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதாக 2 வாரத்திற்குள் அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.